New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/29/bLT4cO49BxopMR7WxIeo.jpg)
"நான் ஒன்னும் பொடியன் இல்ல.. என் பேரு சூர்யவன்ஷி": இணையத்தை கலக்கும் மீம்ஸ்!
ராஜஸ்தான் அணிக்காக அபாரமாக விளையாடிய 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷியை வைத்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸ்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
"நான் ஒன்னும் பொடியன் இல்ல.. என் பேரு சூர்யவன்ஷி": இணையத்தை கலக்கும் மீம்ஸ்!
குஜராத் அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கிய 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார். இதன்மூலம் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் சிறப்பான ஆட்டத்திற்காக இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் சூரியவன்சிக்கு வழங்கப்பட்டது. ராஜஸ்தான் அணிக்காக அபாரமாக விளையாடிய சூர்யவன்ஷியை வைத்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸ்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
”கே.ஜி.எஃப்-1” படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரை பாட்டிலால் அடிக்கும் சிறுவனான ராக்கி, "நான் ஒன்னும் பொடியன் அல்ல. என் பேரு ராக்கி" என்று சொல்லுவார். இதில் வரும் சிறுவனை வைபவ் சூர்யவன்ஷியாக மாற்றி, "நான் ஒன்னும் பொடியன் இல்ல.. என் பேரு வைபவ் சூர்யவன்ஷி" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நான் அடிச்ச 10 பேருமே டான் தான்டா ரகம்.!
”சூர்யவம்சம்” படத்தில் பேரன் சக்திவேல் தாத்தா சக்திவேலுக்கு "பாயாசம் சாப்பிடுங்க பிரண்ட்" என்று கொடுப்பார். அதனை சரத்குமார் வீட்டிற்கு சென்று சாப்பிடுகிறேன் என்று சொல்வார். அதில் வரும் சரத்குமாரை ராகுல் டிராவிட்டாகவும், பேரனை வைபவ் சூர்யவன்ஷியாகவும் மாற்றி, "டிராவிட் அங்கிள்.. என் ஹோம்வொர்க்கை எழுதி வைங்க.. நான் போயிட்டு பொழந்திட்டு வரேன்" என்று சொல்வதாக மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
“சென்னை - 28” படத்தில் சின்னப்பசங்களிடன் சிக்கிக்கொள்ளும் ஷார்க்ஸ் அணியின் பவுலர் பழனி, "டேய்.. அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா" என்று சொல்லுவார். இதில் சின்னப் பையனாக வைபவ் சூர்யவன்ஷியையும், பழனியாக குஜராத் அணி பவுலர்களையும் மாற்றி, "டேய்.. அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா" என்று சொல்வதாக மீம் உருவாக்கப்பட்டு உள்ளது.
சூர்யவன்ஷியிடம் ஆதார் கார்டு வாங்கி செக் பண்ணி பாருங்கடா! என்று முகநூலில் ஒருவர் பதிவிட்டுள்ளார். 14 வயதில் எப்படி இவ்ளோ பவர் இருக்கு.. இந்த வயதில் 2 பேர் சேர்ந்தா கூட ஒரு பெஞ்ச் தூக்க முடியாது என்றும் தனது குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். இந்த சூர்யவன்ஷி 30 ரன்கள் அடித்தபோதே வீட்டில் அப்பா கேவளமாக என்னைத் திட்டினார். இப்ப 100 ரன்கள் வேர அடிச்சிட்டான் என்று பரிதாபங்கள் சுதாகர் புலம்புவதுபோல மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
”சிங்கம்-2” படத்தில் கருவக்குளம் ஏரியாவுக்குள் செல்லும் சூர்யா, "லாரன்ஸ் எங்க" என்று கேட்பார். அதற்கு யாரென்றே தெரியாத ஒருவர் திடீரென "தெரியாது சார்" என்று சொல்ல, சடாரென சூர்யா ஒரே அடியாக நொறுக்குவார். அதனை அப்படியே மாற்றி சூர்யாவாக சி.எஸ்.கே. ரசிகர்களை மாற்றி, வைபவ் சூர்யவன்ஷி இன்னிங்ஸை பார்த்துவிட்டு நேராக சி.எஸ்கே வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு சென்று தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாட்டி ரூம் நம்பர் கேட்பதாகவும் மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் தொடரில் அதிவேகமாக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி. இதனை பார்த்த ரசிகர் ஒருவர், "நல்லவேளை.. எங்க அப்பா மேட்ச் பார்க்காமல் தூங்கிட்டாரு போல.. இல்லைனா இவன வச்சு ஒரு கடிய போட்ருப்பாரு எனக்கு" என்று சொல்வதாக பதிவிட்டுள்ள மீம் ஒவ்வொரு இளைஞனின் குமுறல் ரகம்.!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.