உலக சாலைப் பாதுகாப்பு தொடர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ் அணியை இந்திய லெஜெண்ட்ஸ் அணி வெற்றி சனிக்கிழமை வெற்றி பெற்றது. இந்த போட்டிக்குப் பிறகு, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உடன் இர்ஃபான் பதான் மகன் இம்ரான் பாக்ஸிங் செய்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
இந்திய லெஜண்ட்ஸ் அணியில் விளையாடிய இர்ஃபான் பதான் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், அவருடைய மகன் குழந்தை இம்ரான் சச்சின் டெண்டுல்கருடன் பாக்ஸிங் செய்து விளையாடுகிறார்.
இந்த வீடியோ குறித்து இர்ஃபான் பதாகு குறிப்பிடுகையில், “இம்ரான் என்ன செய்தான் என்று அவருக்கு தெரியாது. அவன் வளரும்போது சச்சினுடன் பாக்ஸிங் செய்தது தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வுக்குப் பிறகு, 2304 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு வான்கடேயில் பேட்டிங் செய்த சச்சின், கடந்த ஒரு வாரமாக பல ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளார்.
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 150 எடுத்தது. முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் டெண்டுல்கர் - வீரேந்தர் சேவாக் ஆகியோர் மீண்டும் அதேபோல அதிரடியாக விளையாடியதால் இந்தியா ஏழு விக்கெட்டுகளுக்குள் 150 ரன்களை கடந்து வெற்றி பெற்றது.
சச்சின் 29 பந்துகளில் ஏழு பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தார். சேவாக் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். டெல்லி டாஷர் இந்த போட்டியை ஒரு பவுண்டரியுடன் தனது பாணியில் ஃபினிஷ் செய்தார். சேவாக் 57 பந்துகளில் 74 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"