இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் தனது குடும்பத்துடன் லண்டனில் செலவழிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்கம் எக்பாஸ்டான் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பயிற்சியின் போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கூட இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது குடும்பத்தினருடன் செலவழித்து வருகிறார். ஷிகர் தவானின் மனைவி ஆயிஷா முக்கர்ஜி, மூன்று குழந்தைகள் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர்.
ஷிகர் தவான் பல்வேறு நாடுகளுக்கு சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடி வருவதால் தனது குடும்பத்தை பல நேரங்களில் மிஸ் செய்வதாக அடிக்கடி சமூகவலைத்தளங்களில் பதிவிடுவார். சமீபத்தில் தனது பிள்ளைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க அவர்களின் பள்ளிகளுக்கு நேரில் சென்றிருந்தார்.
Just strolling around the street with these two strangers ???? pic.twitter.com/TlEOFqFzR5
— Shikhar Dhawan (@SDhawan25) 19 July 2018
இப்படி தனது குடும்பத்தினர் மீது அதிகப்படியான பாசத்தை காட்டும் ஷிகர் தவான், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு இங்கிலாந்து பக்கிங்கம் அரண்மனைக்கு சென்றுள்ளார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
yeah, we were there #buckinghampalace ❤️ pic.twitter.com/FJFTT6hQ5N
— Shikhar Dhawan (@SDhawan25) 20 July 2018
இவர்களுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் தனது மனைவி அனுஷ்காவுடன் சென்றுள்ளார். இவர்கள் அனைவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில், தனது தந்தை பற்றி ஷிகார் தவானின் பிள்ளைகள் நெகிழ்ச்சியுடன் பகரிந்துள்ளனர். ”ஓய்வு நேரத்திலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கும் எங்களின் தந்தை தான் தி பெஸ்ட்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.