New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/28/ufDLzDmpq1scYCXQdsWt.jpg)
கவிழ்ந்த சரக்குக் கப்பல் தலைகீழாகக் காட்சியளிப்பதையும், ஒரு பகுதி மூழ்கிய கப்பலுக்குள் பல ஆடுகள் சிக்கியிருப்பதையும் வீடியோ காட்டுகிறது (Image Source: @dailymail/Instagram)
உள்ளூர் மீனவர்கள் தலைமையில் தீவிர மீட்புப் பணி நடந்த போதிலும், இந்த சம்பவத்தில் பரிதாபமாக 160-க்கும் மேற்பட்ட ஆடுகள் கடலில் மூழ்கி இறந்தன.
கவிழ்ந்த சரக்குக் கப்பல் தலைகீழாகக் காட்சியளிப்பதையும், ஒரு பகுதி மூழ்கிய கப்பலுக்குள் பல ஆடுகள் சிக்கியிருப்பதையும் வீடியோ காட்டுகிறது (Image Source: @dailymail/Instagram)
ஆயிரக்கணக்கான ஆடுகளை ஏற்றிச் சென்ற கால்நடைக் கப்பல் செங்கடலில் கவிழ்ந்தது. இதனால், உள்ளூர் மீனவர்கள் துணிச்சலுடன் விரைந்து சென்று முடிந்தவரை அதிக ஆடுகளை கடலில் மூழ்காமல் காப்பாற்றினர். அல் ஜசீரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த சரக்குக் கப்பல் ஜிபூட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது கவிழ்ந்தது.
உள்ளூர் மீனவர்கள் தலைமையில் தீவிர மீட்புப் பணி நடந்த போதிலும், இந்த சம்பவத்தில் பரிதாபமாக 160-க்கும் மேற்பட்ட ஆடுகள் மூழ்கி இறந்தன. டெய்லி மெயில் பகிர்ந்த வைரல் வீடியோவில், கடலில் சிதறிக் கிடந்த ஆடுகளைக் காப்பாற்ற பல சிறிய படகுகள் விரைந்து செல்வது காட்டுகிறது. மேலும், அந்த வீடியோவில், கவிழ்ந்த சரக்குக் கப்பல் தலைகீழாகக் காட்சியளிக்கிறது. மேலும், ஒரு பகுதி மூழ்கிய கப்பலுக்குள் பல ஆடுகள் சிக்கியிருப்பதையும் காண முடிகிறது. பல ஆடுகள் கொந்தளிப்பான நீரில் நீந்துவதையும் பார்க்க முடிகிறது.
இந்த வீடியோவை பகிர்ந்த டெய்லி மெயில், “ஏமன் மக்கள் ஒரு வணிகக் கப்பல் தரை தட்டிய பிறகு செங்கடலில் இருந்து நூற்றுக்கணக்கான ஆடுகளை மீட்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டியதாயிற்று” என்று எழுதியுள்ளது.
வீடியோவைப் பாருங்கள்:
Livestock Ship Capsizes off Aden Coast
— Rusty Sun Compass (@sun_iscompass) April 27, 2025
A ship carrying 2,000 sheep from Somalia to Aden capsized in the Gulf of Aden. Fishermen rescued some animals, but hundreds drowned. pic.twitter.com/nbT1znEAIr
இந்த வீடியோ வேகமாகப் பரவி சமூக ஊடக பயனர்களிடையே பல எதிர்வினைகளைத் தூண்டியது. ஒரு பயனர், “மூழ்கி இறப்பதிலிருந்து காப்பாற்றப்பட்ட ஆடுகள், சிறிது நேரத்திலேயே கொல்லப்படுவதற்கு நன்றியுள்ளவர்களாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று எழுதினார். மற்றொரு பயனர், “இது மிகவும் மனதை உடைக்கிறது” என்று கருத்து தெரிவித்தார்.
மூன்றாவது பயனர், “கப்பல்களில் அதிக எண்ணிக்கையிலான விலங்குகளை கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும்” என்று கூறினார்.
இதேபோன்ற சம்பவம் நவம்பர் 2019-ல் நடந்தது. அப்போது ருமேனியாவின் கருங்கடல் கடற்கரையில் குயின் ஹிந்த் என்ற சரக்குக் கப்பல் கவிழ்ந்தது. அந்தக் கப்பலில் 14,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன. அது சவுதி அரேபியாவுக்குச் சென்று கொண்டிருந்தது. பணியாளர்கள் மீட்கப்பட்டாலும், பல ஆடுகள் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. அவசரகால சேவைகள் சில ஆடுகளை மீட்டதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டது.
ஜூன் 2022-ல், சூடானின் செங்கடல் துறைமுகமான சுவாக்கினில் பத்ர் 1 என்ற கால்நடைக் கப்பல் மூழ்கியது. அதில் இருந்த 15,000-க்கும் மேற்பட்ட ஆடுகளில் பெரும்பாலானவை இறந்தன. இந்த சம்பவத்தில் பணியாளர்கள் உயிர் பிழைத்தனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அக்டோபர் 2024-ல், பாகிஸ்தான் கடற்படை ஏடன் வளைகுடாவில் சிக்கியிருந்த ஈரானிய மீன்பிடி படகை மீட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.