New Update
/indian-express-tamil/media/media_files/kkaSbK0C7MysP3xT0mBD.jpg)
தீ விபத்தால் யானை சுப்புலட்சுமி காயமடைந்த தகவல் பரவியதை அடுத்து அப்பகுதி மக்களும், பக்தர்களும் வேதனை அடைந்துள்ளனர்.
தீ விபத்தால் யானை சுப்புலட்சுமி காயமடைந்த தகவல் பரவியதை அடுத்து அப்பகுதி மக்களும், பக்தர்களும் வேதனை அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோவிலில் சுப்புலட்சுமி என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. சுமார் 52 வயதுடைய இந்த யானையை இரவில் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள கொட்டகையில் கட்டி போடுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல் இரவு யானை கட்டி போட்டிருந்தது. அப்போது யானைக்கு அமைக்கப்பட்டு இருந்த நிழல் குடையில் மின் கசிவு காரணமாக தீ பற்றி எரிந்துள்ளது. இதனால், யானை சுப்புலட்சுமிக்கு தீக்காயம் அடைந்தது.
இரவில் யானையின் பிளறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்து, தீயை அணைத்தனர். காயமடைந்த யானை சுப்புலட்சுமிக்கு மறைவான இடத்தில் வைத்து கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தீ விபத்து எவ்வாறு நடைபெற்றது என சம்பவ இடத்தை வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்தால் யானை சுப்புலட்சுமி காயமடைந்த தகவல் பரவியதை அடுத்து அப்பகுதி மக்களும், பக்தர்களும் வேதனை அடைந்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.