Advertisment

8 அடி பாம்பை அசாட்டாகப் பிடித்த வீரப் பெண்; வைரல் வீடியோ

8 அடி பாம்பை பிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை; வைரல் வீடியோ.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
snak.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவர் தனது சிறுவயதில் இருந்து குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் பாம்புகளை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து வருகிறார். முறையான பயிற்சி பெற்று செய்து வருகிறார். 

Advertisment

இந்நிலையில் கோவை புலியகுளம் குடியிருப்பு பகுதியில் பாம்பு ஒன்று சுற்றித் திரிவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். 

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர்கள், உமா மகேஸ்வரி மற்றும் சஞ்சய் ஆகியோர் சுமார் 8 அடி நீளம் உள்ள சாரப் பாம்பை லாபமாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். 

முன்னதாக பிடித்த பாம்பை வைத்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பாம்பு பிடி வீராங்கனை உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ளார்.  

அதில் மனிதனிடமிருந்து பாம்பையும், பாம்பிடம் இருந்து மனிதனையும் காப்போம் எனவும், இந்த பாம்புகளை யாரும் அடிக்க வேண்டாம் எனவும் வீடு, தோட்டப் பகுதியில் பாம்புகள் இருந்தால் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் கொடுக்கும்படியும் அவர் கூறினார். பெண் பாம்பு பிடி வீராங்கனையின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

snake
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment