Advertisment

பிடிக்க வந்தவரை கடித்த கட்டுவிரியன்: பாம்பு பிடி வீரர் மரணம்; கோவையில் அதிர்ச்சி!

சுமார் மூன்று அடி நீளம் கொண்ட அந்த பாம்பு கட்டுவிரியன் இனத்தைச் சேர்ந்த அதிக விஷம் கொண்ட பாம்பு.

author-image
WebDesk
New Update
Snkae bgs

அதிக விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு தன்னை பிடிக்க வந்த வீரரை கடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கோவை கணுவாய் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன். பாம்பு பிடி வீரரான இவருக்கு மனைவி, பள்ளி படிக்கும் ஒரு மகன் மற்றும் கல்லூரி படிக்கும் மகள் உள்ளனர். நேற்று இரவு காளப்பநாயக்கன் பாளையத்தில் பகுதியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் பாம்பு புகுந்ததாக வந்த முரளிதரனுக்கு தகவல் வந்துள்ளது. உடனடியாக அங்கு சென்ற அவர், பார்த்த போது அங்கு இருந்த மேஜை அடியில் இருப்பது தெரிந்துள்ளது.

மேலும் சுமார் மூன்று அடி நீளம் கொண்ட அந்த பாம்பு கட்டுவிரியன் இனத்தைச் சேர்ந்த அதிக விஷம் கொண்ட பாம்பு என்று தெரிந்துகொண்ட முரளிதரன், அந்த பாம்பை லாவகமாக பிடிக்க செய்த முயற்சியில், பாம்பின் வாலைப் பிடித்து தூக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அவரை கடித்து உள்ளது. ஆனாலும் பாம்பை விடாத அவர், அதனை பைக்குள் பிடித்து தூக்கி செல்ல முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இது குறித்து 108 ஆம்புலன்ஸ், வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அந்தப் பாம்பு கடித்த இடத்தில் ரத்தத்தை வெளியேற்றி உள்ளார். ஆனாலும் பாம்பு கடித்து ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திலே உயிரிழந்து உள்ளார். அங்கு வந்த வனத்துறை மற்றும் துடியலூர் காவல் துறையினர் முரளிதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

snake
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment