Advertisment

50 கிமீ வேகத்தில் விரட்டிய மாபெரும் உருவம்: திடீரென நின்றுகொள்ள என்ன காரணம்?

2000 கிலோ எடையுள்ள காண்டாமிருகத்திடம் தனியாக மாட்டிக் கொண்டால் எப்படி தப்பிப்பது?

author-image
WebDesk
New Update
50 கிமீ வேகத்தில் விரட்டிய மாபெரும் உருவம்: திடீரென நின்றுகொள்ள என்ன காரணம்?

2000 கிலோ எடையுள்ள காண்டாமிருகத்திடம் தனியாக மாட்டிக் கொண்டால் எப்படி தப்பிப்பது என்பது குறித்து இந்திய வனத்துறை அதிகாரி தனது ட்விட்டர் பதிவில் மூலம் விளக்கியுள்ளார்.

Advertisment

 

வீடியோ ஒன்றில், காண்டாமிருகம்  வாகனத்தை கடுமையாக துரத்துகிறது. ஒரு கட்டத்தில் வாகனத்தை  பிடித்து விடும் என்று பதட்டமும் நம்முள் எழுகிறது. அபயாத்தை உணர்ந்த  ஓட்டுனர், உடனடியாக தனது  வேகத்தை அதிகரிக்கிறார். இறுதியில், காண்டாமிருகம் தனது இயலாமையை ஒத்துக் கொண்டு காட்டுக்குள் திரும்புகிறது.

சுசந்தா நந்தா தரும் விளக்கம்: காண்டாமிருகத்தின்  கண்பார்வை மற்ற விலங்குகளை ஒப்பீடுகையில்  மோசமானது. 30 மீட்டருக்கு அப்பால் உள்ள ஒருவரை அதனால்  கண்டறிய முடியாது.  இந்த தூர இடைவெளியைத் தாண்டி வாகனம் செல்லத் தொடங்கியதால், காண்டாமிருகம் தனது முயற்சியை  கைவிட்டது. மேலும்,  காண்டாமிருகம் ஒருவரை தாக்க நினைத்தவடன் ஒரே  திசையில் செல்ல முயற்சிக்கும். எனவே, வாய்ப்பு இருந்தால் எதிர் திசையில் செல்ல முயற்சியுங்கள் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment