New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/28/efncG6s9iDZh9XZ4a7ve.jpg)
குடியிருப்பு பகுதியில் சத்தம் இல்லாமல் புகுந்து வாழை மரத்தை தூக்கி செல்லும் காட்டு யானைகளால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
கோவை, துடியலூர் அருகே பன்னிமடை கணபதி கார்டன் பகுதியில் நேற்று இரவு புகுந்த இரண்டு காட்டு யானைகள், வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த வாழை மரத்தை பிடுங்கி, சாப்பிட்டுக்கொண்டே செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சத்தம் இல்லாமல் புகுந்து வாழை மரத்தை தூக்கி செல்லும் காட்டு யானைகளால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். அந்தப் பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிரிடப்பட்டு இருந்த பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
வீட்டில் புகுந்து வாழை மரத்தை தூக்கி சென்ற காட்டு யானை: வைரல் வீடியோ! pic.twitter.com/FsgNwR9I8v
— Indian Express Tamil (@IeTamil) November 28, 2024
இதனிடையே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வாழை மரங்களை பிடுங்கி தூக்கிச் செல்லும் யானைகளால் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் முன்பு தமிழக அரசு வனத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.