Advertisment

உயிரைப் பணயம் வைத்து மயிலை காப்பாற்றிய இளைஞர்; வரைல் வீடியோ

பாம்பு உள்ள ஆழமான கிணற்றில் தவறுதலாக விழுந்து தத்தளித்த மயில் ஒன்றை அப்பகுதி இளைஞர் ஒருவர் உயிரைப் பணயம் வைத்து துணிச்சலாக இறங்கி மயிலைக் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வரைல் ஆகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
man rescues peacock from snake infested well, man rescues peacock from well, கிணற்றிலிருந்து மயில் மீட்பு, மயில் மீட்பு வைரல் வீடியோ, snakes, peacock rescue from well, peacock rescue viral video, trending, Tamil indian express

man rescues peacock from snake infested well, man rescues peacock from well, கிணற்றிலிருந்து மயில் மீட்பு, மயில் மீட்பு வைரல் வீடியோ, snakes, peacock rescue from well, peacock rescue viral video, trending, Tamil indian express

ஆழமான கிணற்றில் தவறுதலாக விழுந்த மயிலை இளைஞர் ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்து துணிச்சலாக இறங்கி மயிலை காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வரைல் ஆகியுள்ளது.

Advertisment

இளைஞர் ஒருவர் கிணற்றில் விழுந்த மயிலை காப்பாற்றிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி உள்ளது. இந்த வீரமிக்க சம்பவம் தமிழகத்தில்தான் நடந்துள்ளது.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

இந்த வீடியோவில், படிக்கட்டுகள் இல்லாத 30 அடி ஆழம்கொண்ட ஆபத்தான நிலையில் உள்ள ஒரு கிணற்றில் மயில் ஒன்று எப்படியோ தவறுதலாக விழுந்துவிட்டது. அது கிணற்றிலிருந்து மீள முடியாமல் தத்தளித்துள்ளது. இதை அப்பகுதியைச் சார்ந்த யாரோ ஒருவர் பார்த்துவிட்டு மற்றவரகளிடம் கூற மயிலைக் காப்பாற்ற இளைஞர் குழு களம் இறங்கினர்.

ஆனால், அதற்குள் அந்தக் கிணற்றில் பாம்பு ஒன்று இருப்பதை அறிந்த அவர்கள் அதனால், மயிலுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அச்சப்பட்ட அவர்கள் மயிலைக் காப்பாற்ற விரைந்து செயல்பட்டனர்.

 

விரைந்து செயல்பட்ட இளைஞர் குழுவினர், படிக்கட்டுகளே இல்லாத அந்தக் கிணற்றில் மயிலை மீட்க ஒரு இளைஞரை கயிறு கட்டி உள்ளே அனுப்பினர். ஒரு குழுவினர் அந்த இளைஞரை பத்திரமாக கிணற்றுக்குள் அனுப்பியவுடன், அந்த இளைஞர்  கிணற்றில் இறங்கி மயிலை மீட்டபின் இளைஞர்கள் அவரை மயிலுடன் மேலே இழுத்தனர்.

கிணற்றிலிருந்து மயிலை மீட்டபின் அந்த இளைஞர் அங்கே பக்கத்தில் வயல் வெளியில் அதை பறக்க வீட்டனர். இளைஞர் உயிரைப் பணயம் வைத்து மையிலை மீட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வரைல் ஆகி உள்ளது.

இப்படி கிணற்றில் விழுந்த மயிலை உயிரைப் பணயம் வைத்து மீட்ட அந்த இளைஞரையும் அவருடன் செயல்பட்டவர்களையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tamilnadu Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment