New Update
/indian-express-tamil/media/media_files/1jnbejXgyizpnReE4mdP.jpg)
வெள்ளதுரையின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கிய காகத்திற்கு சி.பி.ஆர் செய்து அதன் உயிரை காப்பாற்றிய தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரி வெள்ளதுரைக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
காகத்தை காப்பாற்றும் வெள்ளதுரையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மின் கம்பத்தில் காகம் தவறி விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடியது.
காகத்திற்கு உயிர் கொடுத்த தீயணைப்பு வீரர்
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 20, 2024
கோவை கவுண்டம்பாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகத்திற்கு CPR செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்#Coimbatore | #Crow | #CPR pic.twitter.com/5vglrCKrse
இதைக் கண்ட அங்கிருந்த வெள்ளதுரை விரைந்து வந்து அதை மீட்டு அதற்கு சி.பி.ஆர் செய்தார். இதன் பின் மெல்ல கண் திறந்த காகம் மீண்டும் வலிமை பெற்று பறந்து சென்றது. வெள்ளதுரையின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.