New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/10/elephant-1-horz.jpg)
நீலகிரி பந்தலூர் பகுதியில் சிக்கிக் கொண்ட குட்டி யானையை 7 மணி நேர போராட்டத்திற்கு தாயுடன் சேர்த்த போது அரங்கேறிய நெகிழ்ச்சி நிகழ்வு
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் சுரங்கம் ஒன்றில் சிக்கிக் கொண்ட குட்டியானை ஒன்றை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு அக்குட்டியை தாயுடன் இணைத்த நிகழ்வு பெரும் பரப்பரப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பந்தலூர் அருகே, செயல்படாமல் இருக்கும் சுரங்கம் ஒன்றில் பிறந்து ஒரு மாதம் கூட நிறையாத பெண் யானைக் குட்டி ஒன்று சிக்கிக் கொண்டு மேலே ஏறி வர இயலாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. இதனை அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் அந்த குட்டியை பத்திரமாக மீட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
செல்ஃபி ஸ்டார் நடாகாஷி கொரில்லா மரணம்; பாதுகாவலர் மடியிலே உயிரைவிட்ட சோகம்!
This little calf happily walks to get reunited with its mother guarded with Z+ security of the Tamilnadu Foresters team.
— Sudha Ramen 🇮🇳 (@SudhaRamenIFS) October 6, 2021
Earlier the calf was found alone & injured. TN forest team rescued, treated and escorts the little one to join with the mother. #Hope #Happiness pic.twitter.com/7vFxRr03IP
பிறகு இந்த குட்டியின் தாயை தேடும் பணி சுமார் 7 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்றது. யானைக் குட்டியை பார்த்தவுடன் நெகிழ்ச்சி அடைந்த தாய் அதன் அருகில் வந்து பத்தரமாய் அழைத்துச் சென்றது.
இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தன்னை பத்திரமாக அழைத்து வந்த வனத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரின் காலை கட்டிக்கொண்ட அந்த யானையின் குறும்பு செயல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.