New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/10/P-Mmees.jpg)
தீபாவளி பண்டியை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டாலும், பெருங்களத்தூர் டிராபிக் பயணிகளுக்கு பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது.
பண்டிகை காலங்களில் வெளியூர்களில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவார்கள். அவர்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ரயில்கள் இயக்கப்படுகிறன. இதில் பேருந்துகளில் பயணிப்பவர்கள் சந்திக்கும் முக்கிய சிக்கல் டிராக்பிக் ஜாம்.
அதிலும் குறிப்பாக சென்னையின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் பெருங்களத்தூர் டிராபிக் பயணிகளில் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் இருக்கும். இதற்காகவே பண்டிகை காலங்களில் பெருங்களத்தூர் டிராபிக்கில் மாட்டிவிட கூடாது என்று பலரும் காலையிலேயே ஊருக்கு கிளம்பி விடுவார்கள்.
தற்போது தீபாவளி பண்டியை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டாலும், பெருங்களத்தூர் டிராபிக் பயணிகளுக்கு பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது. இந்த டிராபிக் ஜாமை கட்டுப்படுத்தும் விதமாக மேம்பாலம் அமைக்கப்பட்டாலும் இன்றுவரை அது மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
இந்நிலையில், பெருங்களத்தூர் டிராபிக் ஜாம் வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.