Tamil Viral Video: ஒரு பச்சைக் குழந்தையை பக்கத்தில் படுக்க வைத்து, தடவிக் கொடுத்து ஆராரோ பாடி தூங்க வைக்கிறார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர். அந்த குழந்தைக்கு அருகில் இன்னும் 2 மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்.
அவர்களும், அந்த நபரின் அருகே வந்து, அவரது அரவணைப்பில் படுத்து தூங்க ஆசைப்படுகிறார்கள். அவரும், அந்த குழந்தைகளையும் அருகில் வரச் சொல்லி அரவணைத்து கொள்கிறார்.
மீன் கூட்டங்களுக்கு உணவளித்த சிம்பன்சி: மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் வைரல் வீடியோ
பாவம், அங்கே ரொம்ப குளிர் போல.... அதான் குழந்தைகளுக்கு குளிர் எடுத்து அவர் அருகில் சென்று அவரது அரவணைப்பை தேடியிருக்கின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், இங்கே ஒரு சிறிய மாற்றம்.....
அந்த குழந்தைகளுக்கு பதிலாக அங்கே சிறுத்தைகள் இருந்திருந்தால்.....?
சிறுத்தைகளை அவர் தடவிக் கொடுத்து படுக்க வைத்திருந்தால்....?
இந்த காட்சியை கற்பனை செய்ய முடிகிறதா?
ஆம்! அதுதான் உண்மை. இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், சிறுத்தைகளுடன் நபர் ஒருவர் கேஷுவலாக ஒன்றாக படுத்திருப்பது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
10, 2020
பார்ப்பவர்களின் இதயத்துடிப்பை நிறுத்தும் இந்த வீடியோ, சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil