New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/02/TRai.jpg)
Tamil Viral Update : கடந்த பிப்ரவரி 12-ந் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வு அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Tamil Viral Update : மும்பையில் ரயில் வருவதற்கு முன் தண்டவாளத்தை கடந்துவிடலாம் என்று சென்ற ஒரு நபர் மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா முழுவதும் ரயில் வரும்போது சாலையுடன் தொடர்புடைய கேட்கள் அடைக்கப்படுவது வழக்கமான ஒன்று. ரயில் சென்றவுடன் சிறிது நேரத்தில் அந்த கேட் திறககப்பட்டுவிடும். ஆனால் ரயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னமே இந்த கேட் அடைக்கப்டுவதால், பலரும் அவசரமாக செல்ல வேண்டும் என்று கூறி விதிகளை மீறி ரயில் வருவதற்கு முன்பே கேட்டை தாண்டி சென்று விடுகின்றனர்.
இந்திய முழுவதும் பல இடங்களில் இந்த விதி மீறல் செயல் நடைபெற்று வருகிறது. அப்படித்தான் மும்பையில் ராஜாதானி எக்ஸ்பிரஸ் ரயில் வரும்போது இரு பக்கமும் கேட்கள் அடைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த இடத்திற்க பைக்கில் வந்த நபர் ரயில் வருவதற்கு முன்பு தண்டவாளத்தை கடந்துவிடலாம் என்ற எண்ணத்தில் கேட்டை மீறி உள்ளே வருகிறார். இவர் தண்டவாளத்தில் செல்லும்போது திடீரென ரயில் வந்துவிடுகிறது.
இதனால் அதிர்ச்சியான பைக்கை தண்டவாளத்தில் விட்டுவிட்டு நகர்கிறார். அப்போது ரயில் பைக்கில் மோதி பைக சுக்கு நூராக போய்விடுகிறது. இந்த நபர் மயிரிழையில் உயிர் தப்பிய சந்தோஷத்தில் கேட்டிற்கு வெளியே வருகிறார். கடந்த பிப்ரவரி 12-ந் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வு அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.