scorecardresearch

”திரும்பி வாடா “இறந்த யானையை பிரிய முடியாமல் தவித்த வன அதிகாரி! இதயத்தை உடைக்கும் வீடியோ

யானை இறந்த உடன், ரேஞ்சர் திரும்பி வாடா என்று கண்ணீருடன் அழுத வீடியோ நெஞ்சை உருக வைத்துள்ளது.

tamil viral video today viral viral video
tamil viral video today viral viral video

tamil viral video today viral viral video : நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு நாப்பது வயதுள்ள யானை ஒன்று சுற்றி வந்தது.அதன் முதுகில் காயம் இருந்தது. இதை பார்த்த வனத்துறையினர் அந்த யானைக்கு கடந்த மாதம் சிகிச்சை தந்தனர்.

உடல்நிலையும் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தது.இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு அந்த யானையின் காது கிழிந்து ரத்தம் கொட்ட தொடங்கியது.

வலியும் வேதனையும் தாங்க முடியாமல் யானை, அங்குள்ள தண்ணீருக்குள் நின்று அலறியது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த யானையை வனத்துறையினர் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இதனையடுத்து நேற்று முன்தினம் முதுமலை கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது, தெப்பக்காடு முகாம் அருகே வந்தபோது லாரியில் நின்றிருந்தவாறு காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த வேதனையடைந்தனர்.

முடமலை புலி ரிசர்வ் பகுதியில் உள்ள சாதிவயல் யானை முகாமில் சிகிச்சை பெற்று வந்தபோது காயமடைந்த யானையை ரேஞ்சர் கவனித்ததாக கூறப்படுகிறது. யானை காயமடைந்ததால் இறந்தபின் அவர் கண்ணீருடன் இருந்தார். இந்நிலையில், யானை இறந்த உடன், ரேஞ்சர் திரும்பி வாடா என்று கண்ணீருடன் அழுத வீடியோ நெஞ்சை உருக வைத்துள்ளது.

சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்த அந்த வீடியோவில், பெயரிடப்படாத ரேஞ்சர் அழுவதையும், யானையின் உடற்பகுதியை மெதுவாக வளர்ப்பதையும் காண முடிகிறது.வனத்துறை ஊழியர் பெள்ளன் யானையை பிடித்து கொண்டு அழுத கண்ணீர் வீடியோ இணையத்தில் வைரலாகி, அனைவர் மனதையும் நெகிழச் செய்து‌ வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil viral video today viral viral video tamil elephant death video