கோவையில் தனியார் பேருந்து மோதி விபத்து; அஞ்சலக ஊழியர் படுகாயம்: சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் தங்களது சுய லாபத்திற்காக அதிவேகமாக இயக்குகின்றனர். இதனால் இச்சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிர்கள் பலி ஏற்படுகிறது.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் தங்களது சுய லாபத்திற்காக அதிவேகமாக இயக்குகின்றனர். இதனால் இச்சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிர்கள் பலி ஏற்படுகிறது.

author-image
WebDesk
New Update
Tamil Accidet

கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரத். இவர் கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு செல்வது வழக்கம். அதே போல் நேற்று வேலைக்கு சென்ற பரத் மீது தனியார் பேருந்து மோதியதில் கால் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.

Advertisment

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் தங்களது சுய லாபத்திற்காக அதிவேகமாக இயக்குகின்றனர். இதனால் இச்சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிர்கள் பலி ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து நிர்வாகமும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

இந்நிலையில் தற்போது விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: