New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/25/ZXMFNCvXR8481putzND5.jpg)
தோட்டத்தில் பதுங்கி தொழிலாளர்களை பயமுறுத்திய 11 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே தனியார் தோட்டத்தில் இருந்து 11 அடி நீள மலைப்பாம்பை வனத்துறை அதிகாரிகள் பிடித்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைலரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல இன்று தோட்டத்தில் இறங்கி வேலை செய்து வந்தனர் அப்போது தோட்டத்தில் ஒரு பகுதியில் உள்ள தென்னை மரத்தின் சோகையை அகற்றியபோது அதிலிருந்து மலை பாம்பு ஒன்று இருந்துள்ளது.
தோட்டத்தில் பதுங்கிய 11 அடி நீள மலைப்பாம்பு: லாவகமாக பிடித்த வனத்துறையினர்; வைரல் வீடியோ! pic.twitter.com/raoS4rV1wA
— Indian Express Tamil (@IeTamil) October 25, 2024
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் கூச்சலிட்ட நிலையில், தோட்டத்து உரிமையாளர் சுப்பிரமணியன் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததார். இதனையடுத்து உடனடியாக அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் தோட்டத்தில் இருந்த சுமார் 11 அடி நீளம் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து பத்திரமாக ஆழியார் அடர்ந்த வனப்பகுதியில் விடடனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.