New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/04/kattu-mah-2025-08-04-13-45-05.jpg)
வனத் துறையினர் யானை வனப்பகுதிக்குள் சென்றதை கண்காணித்தனர், வனத் துறையினரின் முயற்சியால் எந்த வித சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள பொம்மனம்பாளையம் பகுதியில் ரவி என்பவர் தோட்டம் பகுதியில் நேற்று நள்ளிரவு உணவு தேடி ஒரு ஒற்றைக் காட்டு யானை வந்தது. இதை கண்காணிப்பு கேமரா மூலம் கவனித்த அவர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத் துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டினர்.
அப்பொழுது சாப்பிட ஒன்றும் கிடைக்காததால் சோகத்தில் நடந்து செல்வது போன்று சென்றது. இதுதொடர்பான காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. பின் தொடர்ந்து வந்த வனத் துறையினர் யானை வனப்பகுதிக்குள் சென்றதை கண்காணித்தனர், வனத் துறையினரின் முயற்சியால் எந்த வித சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
உணவு கிடைக்காத சோகம்: தோட்டத்தில் புகுந்த காட்டு யானையை விரட்டிய வனத்துறை: வைரல் வீடியோ pic.twitter.com/qPoeid1RSt
— Indian Express Tamil (@IeTamil) August 4, 2025
கடந்த சில தினங்களுக்கு முன்பு யானை வனப்பகுதிக்குள் செல்லும் போது ஒரு யானை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அடிக்கடி யானைகள் வந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து யானைகள் வனப்பகுதியில் இருந்து வருவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.