Advertisment

சேதமான வாழைத்தோட்டம்: ஊருக்குள் புகுந்த யானை கூட்டம் அட்டகாசம்; வைரல் வீடியோ!

வீட்டின் அருகில் யானைகள் மேய்சலில் ஈடுபட்டதால் குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் மொட்டைமாடிக்கு சென்றனர்.

author-image
WebDesk
New Update
elephn

கோவை அருகே வனப் பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் வாழை மரங்களை சேதப்படுத்தி சாப்பிட்டு விட்டு சென்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கோவை வடவள்ளி காவல் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு காட்டு யானை கூட்டம் புகுந்தது. யானைகள் வீட்டின் அருகில் பயிரிடப்பட்டு இருந்த வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. வீட்டின் அருகில் யானைகள் மேய்சலில் ஈடுபட்டதால் குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் மொட்டைமாடிக்கு சென்றனர்.

வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்ட யானைகள் பின்னர் அங்கிருந்து சென்றன. வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு அவர்கள் வராததால் பொது மக்கள் அதிருப்தி அடைந்தனர். வனத்துறையினர் யானை கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் இருப்பதால் இது போல அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுவதாகவும், திறம்பட செயல் படும் வனத்துறையினரை இந்த பகுதியில் பணியமர்த்த வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment
Advertisement

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Elephant
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment