/indian-express-tamil/media/media_files/2025/09/21/elephanth-2025-09-21-08-50-59.jpg)
வனத்துறை தண்ணீர் நிரப்பி வைத்து இருந்த தொட்டியில், தாகத்தை தணிக்க மூன்று குட்டிகளுடன் வந்த ஆறு காட்டு யானைகள் குறித்த செல்போன் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறனது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக உணவு, தண்ணீர் தேடி தொண்டாமுத்தூர், மதுக்கரை, பேரூர் தடாகம், நரசிபுரம் போன்ற கிராமப் பகுதிகளில் புகுந்து கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் மட்டுமின்றி விவசாய தோட்டங்களில் கால்நடைகளுக்கு வைத்து இருந்த தீவனங்கள், விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை உண்டு சேதப்படுத்தி வந்தது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலை உள்ள பகுதிகளில் வறட்சி நிலை மாறி பசுமை நிறமாக காட்சி அளித்தது. இருப்பினும் மனிதர்களின் உணவுப் பொருள்களை உண்டு ருசி கண்ட யானைகள் அப்பகுதியிலே முகாமிட்டு தற்பொழுது வரை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி அலைந்து திரிந்து கொண்டு உள்ளது. இதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து அதனை தடுக்கவும், வனப்பகுதிக்குள் விரட்டவும் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தடாகம் பள்ளத்தாக்கு, 24 வீரபாண்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட மருதங்கரை, கீழ்பதி, மூளைக்காடு மலைவாழ் கிராமத்தின் அருகே வனத் துறையினர் வனவிலங்குகளுக்கு அமைத்து உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைத்து இருந்தனர். உணவு, தண்ணீர் தேடி அலைந்து திரிந்த அந்த யானை கூட்டம், அதனை அருந்தி தாகத்தை தணித்துக் கொண்டது.
அதனை அப்பகுதிக்குச் சென்ற நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.