நாயை துரத்தி வந்த காட்டு யானை: வாகனம் வருவதை பார்த்து வனப்பகுதிக்குள் ஓட்டம்! வைரல் வீடியோ

யானையைக் கண்ட நாய் குலைக்க ஆரம்பித்தது. இதனால் டென்ஷன் ஆன அந்த ஒற்றைக் காட்டு யானை அந்த நாயை விரட்டி வந்தது.

author-image
WebDesk
New Update
wild elephant x

கோவையில் ஒற்றை யானை வலம் வருபதை பார்த்த நாய் குரைத்த நிலையில், அதை யானை விரட்டியபோது, வாகனம் வருவதைப் பார்த்து வனப் பகுதிக்கு சென்ற சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கோவை, மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை அப்பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் உணவு தேடி தொடர்ந்து உலா வந்து கொண்டு உள்ளது. இதனிடையே, நேற்று இரவு வடவள்ளி, நவாவூர் பகுதியில் குடியிருப்பு அருகே சென்று கொண்டு இருந்த யானையைக் கண்ட நாய் குலைக்க ஆரம்பித்தது. இதனால் டென்ஷன் ஆன அந்த ஒற்றைக் காட்டு யானை அந்த நாயை விரட்டி வந்தது.

அப்போது எதிரே கார் வருவதைப் பார்த்து மீண்டும் திரும்பி வனப் பகுதிக்குள் சென்றது. அந்தக் வீடியோ அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்தக் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: