New Update
/indian-express-tamil/media/media_files/IQRt8mQMeC5nU3KZcn5C.jpg)
காவலர்கள் இரவில் ரோந்து சென்றபோது தற்செயலாக ஒற்றை வரி புலி வேட்டையாட வனப்பகுதியில் இருப்பதைக் கண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகளுக்கு காப்பகம் பகுதிக்கு உட்பட்ட ஆறு வனச்சரகங்களில் காட்டு யானைகள் சிறுத்தை, புலி, கருஞ்சிறுத்தை, செந்நாய், காட்டுமாடு மான்கள் மற்றும் அபூர்வ தாவரங்கள் எண்ணற்ற வசித்து வருகின்றன.
இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட டாப்ஸ்லிப் அருகிலுள்ள கேரளா வனப்பகுதி, அடர் வனப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இரவில் ரோந்து சென்றபோது தற்செயலாக ஒற்றை வரி புலி வேட்டையாட வனப்பகுதியில் இருப்பதைக் கண்டுள்ளனர். இதனை பார்த்து சுதாரித்துக்கொண்ட வனத்துறையினர் புலியை நோட்டமிட்டுள்ளனர்.
வேட்டைக்கு தயாரான வேட்டையன்: காட்டுக்குள் நடமாடும் ஒற்றை வரி புலி; வைரல் வீடியோ#Coimbatore | #Tiger pic.twitter.com/8GhEnj5oH6
— Indian Express Tamil (@IeTamil) September 2, 2024
வனத்துறையினர் கண்ட புலி திடீரென காட்டுக்குள் மறைந்து சென்றது, இதை அடுத்து வனத்துறையினர் புலியைச் தேடிய போது அடர் வனப்பகுதிக்குள் வன விலங்குகளை வேட்டையாட சென்றது தெரியவந்தது. மேலும் சுற்று வட்டார பகுதிகளில் புலி நடமாட்டம் உள்ளதால் மலைவாழ் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.