/indian-express-tamil/media/media_files/2025/09/19/anakonda-2025-09-19-13-37-20.jpg)
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் : ஆனா நாங்கள் கையில் பிடித்து விளையாடுவோம் என்று கூறியள்ள, அனகோண்டா, மெக்சிகன் பிளாக் கிங்ஸ் ஆகிய பாம்புகளின் பிடித்துக் கொண்டு அழகை ரசிக்கும் மகிழ்ந்த பெண் சமூக அலுவலர். ஒருவர் பாம்பை பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை, டி.வி.எஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகரும், சமூக ஆர்வலர் பிரீத்தி லட்சுமி இவர் உயிரினங்கள் மற்றும் விலங்குகள் மீது ஆர்வம் கொண்ட இவர், சமீபத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் ஃபார்ம்க்கு சென்றவர், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு விலங்குகளை ஆர்வமுடன் கண்டு களித்தார். பின்னர் அங்கு வைக்க பட்டு உள்ள மஞ்சள் நிற அனகோண்டா மற்றும் மெக்சிகன் பிளாக் கிங்ஸ் ஆகிய பாம்புகள் கைகளில் பிடித்துக் கொண்டு ஆர்வமுடன் அதனைப் பார்த்து ரசித்தவர், அதன் தன்மை குறித்து அவர் கேட்டு அறிந்தார்.
மேலும் பாம்புகளை கண்டால் யாரும் அடிக்க வேண்டாம், அவற்றை துன்புறுத்த வேண்டாம், அதனை கண்டால் உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் பாம்பு பிடி வீரர்களைக் கொண்டு அவற்றை பத்திரமாக பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பிடிக்கப்பட்ட பாம்பு வனத்துறையுடன் ஒப்படைத்தால் அவர்கள் பாதுகாப்பாக வனப் பகுதியில் விட்டு விடுவார்கள் ஆகவே பாம்பை பார்த்த உடனே ஒரு சிலர் கம்பை கொண்டு அடித்து கொன்று விடுவது மனிதாபிமானம் இல்லாத செயல் எனவும், பாம்புகளை நாம் பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மஞ்சள் நிற அனகோண்டா மற்றும் மெக்சிகன் பிளாக் கிங்ஸ் போன்ற, இந்த வகை பாம்புகள் விஷம் இல்லாதவை என்றாலும் மனிதன் உடலை முறுக்கி எலும்புகளை உடைக்கும் திறன் கொண்டவை என அதனை பராமரிக்கும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.