/tamil-ie/media/media_files/uploads/2023/04/duraiMudugan.jpg)
அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்
ஊட்டியில் நடைபெற்ற திமுக விழாவில் 2 முறை மின்தடை ஏற்பட்ட நிலையில், மின் ஊழியருக்கு போன் செய்த அமைச்சர் துரைமுருகன் வெளியூருக்கு கிளம்ப ரெடியா இரு என்று மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம் தற்போது தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நிலகிரி மாவட்டம் ஊட்டியில், புதிய உறுப்பினர்களை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சர் துரைமுருகன், ம.சுப்பிரமணி, ராமச்சந்திரன் ஆகிய 3 அமைச்சர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் முபாரக் விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்பு பேசினார். அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், ஜெனரேட்டர் மூலம் மீண்டும் நிகழ்ச்சி தொடங்கியது. சில நிமிடங்களில் மின்சாரம் வந்ததை தொடர்ந்து ஜெனரேட்டர் ஆஃப் செய்யப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், மீண்டும் மின் தடை ஏற்பட்டது. இதனால் பேச்சை தொடர முடியாத நிலை ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. 2-வது முறையாக ஜென்ரேட்டர் இயக்க தாமதமானதால் கோபமான அமைச்சர் துரைமுருகன், மின்வாரிய ஊழியர்களுக்கு போன்போட்டு தர சொல்லி ஊழியர்களிடம் கூறினர்.
ஏன் மினிஸ்டர் இருந்தப்ப கரண்ட் போனா தான் தப்பா?
— Beekay🎃 (@beekay_hq) April 4, 2023
அணில் 🐿️ விளையாட்டு என்ற படி நகர்ந்தார் ஏக்நாத் சிண்டே
— pamaran (@a_pamaran) April 4, 2023
அதன்படி மின்வாரிய ஊழியருக்கு போன் செய்தபோது அவரிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மூணு மினிஸ்டங்க மீட்டிங்க இருக்கோம். ரெண்டு முறை கரன்ட் கட் ஆகுதுனா என்ன அர்த்தம். இதெல்லாம் சரியா தெரியலையே நாளைக்கு காலையில் வெளியூர் செல்ல தயாரா இரு என்று எச்சரிக்கும் வகையில் பேசிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.
மூன்று அமைச்சர்களையும் பதவிக்கு கொண்டு வந்த மக்கள், தினசரி ஒவ்வொரு ஊரிலும் கரண்ட் இல்லாமலும், புதியதாக மீட்டர் கிடைக்காமலும் அவதிப்படுகிறார்களே அதை என்ன சொல்வது?
— THAMIMUN ANSARI (@itansari2015) April 4, 2023
கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறியிருந்தாலும், தமிழகம் முழுவதும் அவ்வப்போது மின்தடை இருப்பது வழக்கமான ஒன்றாவிட்டது. இது தற்போது அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே எதிரொலித்திருப்பதும், இதற்கு அமைச்சர் எச்சரிக்கும் தோனியில் மின்வாரிய ஊழியரிடம் பேசியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.