கண்டக்டர் அப்பவே சொன்னார், நான் தான் கேட்கல: மன்னிப்பு கேட்ட பேருந்து சாகச மாணவன்: வைரல் வீடியோ!

மாணவன் பேருந்து சாகசத்தில் ஈடுபட்டதால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் மாணவனை கண்டுபிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.

மாணவன் பேருந்து சாகசத்தில் ஈடுபட்டதால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் மாணவனை கண்டுபிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
buss student

சாகசத்தில் ஈடுபட்ட மாணவன் மன்னிப்பு கேட்கும் வீடியோ

பாபு ராஜேந்திரன் கடலூர் மாவட்டம்

Advertisment

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்கள் கடலூரில் தனியார் பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை தேடிப்பிடித்து மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் தனியார் பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த தனியார் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி பயணம் செய்து வரும் நிலையில், குறிப்பிட்ட சில மாணவர்கள் படிகட்டின் வழியாக மேல் பகுதிக்குச் சென்றும்,படிக்கட்டுகளில் தொங்கியும் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை அரசு மருத்துவமனை அருகே சென்ற தனியார் பேருந்து மீது ஏறி இளைஞர் ஒருவர் சாகசத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோ வெளியான நிலையில் அப்பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரிமையாளரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஊழியர்கள் இருவரும் அந்த பேருந்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை தேடிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisment
Advertisements

பின்னர் போலீசார் அவரிடம் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். மது போதையில் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் கூறியதை கேட்காமல் பேருந்து மேற்கூரை மீது ஏறி நின்றதாகவும் அதற்கு தற்போது மன்னிப்புக் கோரி கொள்வதாகவும் அந்த இளைஞர் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: