சிகிச்சை அளிக்க சென்ற வனத்துறையினர் : சீறிப்பாய்ந்த சிறுத்தை ; வைரல் வீடியோ

கோவை, ஆனைகட்டி அடுத்து உள்ள புளியபதி என்ற மலைப் கிராமப் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு இரண்டு சிறுத்தைகள் மோதிக் கொண்டன.

கோவை, ஆனைகட்டி அடுத்து உள்ள புளியபதி என்ற மலைப் கிராமப் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு இரண்டு சிறுத்தைகள் மோதிக் கொண்டன.

author-image
WebDesk
New Update
Leopard
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இரண்டு சிறுத்தைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு படுகாயம் அமைந்த நிலையில், அவற்றிற்கு, வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே சிறுத்தைகள் மோதிக்கொண்ட வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழக - கேரளா எல்லையான கோவை, ஆனைகட்டி அடுத்து உள்ள புளியபதி என்ற மலைப் கிராமப் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு இரண்டு சிறுத்தைகள் மோதிக் கொண்டன. அதில் ஆண் சிறுத்தை காயங்களுடன் கேரள மாநிலத்திற்கு சொந்தமான வனத்தில் படுத்துக் கொண்டு இருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் கேரள மாநில வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினர் காயங்களுடன் படுத்து இருந்த சிறுத்தை அருகில் சென்ற போது திடீரென வனத் துறையினரை துரத்தியது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. நீண்ட முயற்சிக்கு பின்னர் காயம் அடைந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வலையால் மூடி அந்த சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர்.

Advertisment
Advertisements

பின்னர் அங்கு உள்ள சைலண்ட் வேலி வனத்துறை முகாமிற்கு கொண்டு சென்று காயம் அடைந்த சிறுத்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் காயம் பட்ட சிறுத்தை பிடித்து சென்ற வனத் துறையினரை தாக்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: