சிவகங்கை அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: சாலையில் ஆறாக ஓடிய 30 ஆயிரம் லிட்டர் மொலாசஸ்

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து மதுபான ஆலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட மொலாசஸ் ஏற்றிய டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது.

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து மதுபான ஆலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட மொலாசஸ் ஏற்றிய டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tanker

இந்த விபத்தில் டேங்கரில் இருந்த 30 ஆயிரம் லிட்டர் மொலாசஸ் சாலையில் வெள்ளம்போல் ஓடி வீணாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து மதுபான ஆலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட மொலாசஸ் ஏற்றிய டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் இயக்கிய டேங்கர் லாரி, சோழபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில், கிராம மக்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் டேங்கரில் இருந்த 30 ஆயிரம் லிட்டர் மொலாசஸ் சாலையில் வெள்ளம்போல் ஓடி வீணாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக சிவகங்கை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: