இதுவரை எவ்வளவோ விலங்குகள் பூங்காக்களுக்கு நாம் சென்றிருப்போம். ஆனால், இப்படியொரு அனுபவத்தை நிச்சயம் சந்தித்திருக்கமாட்டோம்.
Advertisment
இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?
அயர்லாந்து நாட்டின் டூப்ளின் நகரில் பிரபல விலங்குகள் பூங்காவுக்கு ராப் கோஸ்டெல்லோ என்பவர் தனது குடும்பத்துடன் சென்றிருக்கிறார். அப்போது அவரது 7 வயது மகன், reinforced glass என்றழைக்கப்படும் வலுவான கண்ணாடி அமைக்கப்பட்ட அறையில் நிற்க, அவரது தந்தை அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார்.
அப்போது, கடும் பசியுடன் சிறுவன் நிற்பதை பார்த்த புலி ஒன்று, புயல் வேகத்தில் சிறுவனை தக்க பாய்ந்தது. வலுவான கண்ணாடியில் மோதி புலி தடுமாற, சிறுவனும் அவனது குடும்பத்திற்கும் ஒரு நொடி உயிர் நின்று திரும்பி வந்தது.
இந்த வீடியோவை சமூக தளங்களில் பகிர்ந்திருக்கும் ராப் கோஸ்டெல்லோ, "இன்று எனது மகன் டூப்ளின் விலங்குகள் பூங்காவின் மெனு ஆகியிருப்பார்" என்று குறிப்பிட்டு பதிவேற்றியுள்ளார்.