வால்பாறை அருகே குடிலில் தூங்கிய சிறுவனின் தலையை கவ்வி இழுத்துச் சென்ற புலி; கூச்சலிட்டு மீட்ட பெற்றோர்

கோவை, வால்பாறை அருகே உள்ள மளுக்கப்பாறையில் குடிலில் தூங்கிக் கொண்டு இருந்த 4 வயது சிறுவனின் தலையை புலி கவ்வி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, வால்பாறை அருகே உள்ள மளுக்கப்பாறையில் குடிலில் தூங்கிக் கொண்டு இருந்த 4 வயது சிறுவனின் தலையை புலி கவ்வி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
Tiger rep

சிறுவன் அலறிய அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் எழுந்து பார்த்த போது தனது மகனின் தலையை புலி கவ்வி உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, வெளியே சென்று கதறி கூச்சலிட்டனர்.

கோவை, வால்பாறை அருகே உள்ள மளுக்கப்பாறையில் குடிலில் தூங்கிக் கொண்டு இருந்த 4 வயது சிறுவனின் தலையை புலி  கவ்வி   இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கோவை மாவட்டம், வால்பாறை அருகே கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட மளுக்கப்பாறை பகுதியில்  மளுக்கப்பாறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அதிரப்பள்ளி பஞ்சாயத்து, வீரன் குடி மலைப்பகுதியில்  இன்று அதிகாலையில் சுமார் 2.15 மணி அளவில்  ராகுல் என்ற 4 வயது  சிறுவன் தந்தை  பேபியுடன்  பிளாஸ்டிக் சீட்டால் மூடப்பட்ட குடிலில் தூங்கிக் கொண்டு இருந்த போது திடீரென குடிலில் புகுந்த புலி சிறுவனின் தலையை கடித்து இழுத்துச் செல்ல முயன்று உள்ளது.

அப்போது சிறுவன் அலறிய அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் எழுந்து பார்த்த போது தனது மகனின் தலையை புலி கவ்வி உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, வெளியே சென்று கதறி கூச்சலிட்டு உள்ளனர்.

இதில் அச்சம் அடைந்த   புலி கவ்வி பிடித்து இருந்த  சிறுவனை கீழே போட்டு விட்டு மிரண்டு காட்டிற்குள் ஓடி உள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து குடும்பத்தினர் உடனடியாக அருகே உள்ள மளுக்கப்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு  விரைந்து சென்ற காவல் துறையினர் காயம் அடைந்த சிறுவனை  மளுக்கப்பாறை டாடா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு  மேல் சிகிச்சைக்காக சாலக்குடி தாலுக்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மற்றும் காவல் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் குடில்களில் தூங்கும் போது கவனமாக தூங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ள நிலையில் இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: