Advertisment

கேரளா நெல்லியம்பதி தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம்... பொதுமக்கள் அச்சம்: வைரல் வீடியோ

நெல்லியம்பதியில் படகிரி தோட்டத்தில் உள்ள தேயிலை செடிகளுக்கு இடையே புலி ஒன்று நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Tiger wandering x

சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற வனத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

நெல்லியம்பதியில் படகிரி தோட்டத்தில் உள்ள தேயிலை செடிகளுக்கு இடையே புலி ஒன்று நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெல்லியம்பதியில் படகிரி தோட்டத்தில் உள்ள தேயிலை செடிகளுக்கு இடையே புலி ஒன்று நடந்து சென்ற காட்சியை அந்த பகுதி மக்கள் செல்போனில் படம் எடுத்து உள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் புலி நடந்து சென்று உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

Advertisment
Advertisement

சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற வனத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால், இதுவரை புலி கண்டு பிடிக்கப்படவில்லை தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தற்பொழுது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment