Advertisment

ஒரு பாடகரின் கடைசி நொடி இப்படியா இருக்கணும்? பாடும் போதே பறி போன உயிர்!

கடைசி நிமிட வீடியோ இணையவாசிகளை உலுக்கி எடுத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
today facebook viral

today facebook viral

today facebook viral : பிரபல கொங்கனி இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் ஜெர்ரி பஜ்ஜோடியின் கடைசி நிமிட வீடியோ இணையவாசிகளை உலுக்கி எடுத்துள்ளது.

Advertisment

கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் பிரபல கொங்கனி இசை பாடகர் ஜெர்ரி பஜ்ஜோடி. இவரின் இசைக்கு ரசிகர்கள் ஏராளம். இவர் பல்வேறு இசை கச்சேரிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறார். இவரின் இசை கக்சேரிக்கு ஏகப்பட்ட கூட்டங்கள் குவியும்.

இந்நிலையில் ஜெர்ரி பஜ்ஜோடி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மங்களூரில் உள்ள பேஜாய் பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தார். வழக்கம் போல் உற்சாகத்துடன் இருந்த அவர் நேயர் விருப்பமாக அந்த நிமிடம் பிரபல கன்னட பாடல் ஒன்றை பாடிக்கொண்டிருந்தார். ரசிகர்கள் ஆரவாரமாக அவரின் பாசலை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஜெர்ரி பஜ்ஜோடி, தீடீரென்று பாடிக் கொண்டிருக்கும் போதே மேடையில் சரிந்து விழுந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர். எந்த ஒரு அசைவும் இல்லாததால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேடையிலேயே மாரடைப்பில் அவரின் உயிர் பிரிந்தது.

இது அவரின் ரசிகர்களை மிகப் பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பாடல் என்றால் உயிர். இசையை உயிராக நேசித்தார். கடைசியில் பாடிக் கொண்டிருந்த போதே இறந்து விட்டார் என அவரின் பிரிவை நினைத்து ஒட்டு மொத்த குடும்பத்தினரும் கண்ணீர் வடித்துள்ளனர்.

ஜெர்ரி பஜ்ஜோடி உயிர் பறிப்போன அந்த கடைசி நொடி வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment