Advertisment

இதை சொல்லி அழுவதா? சிரிப்பதா? படாதபாடு பட்டு 4 மலைப்பாம்புகளை களவாடிய மக்கு திருடர்கள்!

தொலைந்து போன பாம்புகள் குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
today viral viral today

today viral viral today

today viral viral today :கெத்து திருடர்களை கேள்விபட்டிருப்பீர்கள். இப்போது மக்கு திருடர்களை பற்றி பார்க்க போகிறோம் வாருங்கள்.

Advertisment

அமெரிக்காவில் காரில் வைக்கப்பட்டிருந்த பேக்கில் பணம் இருப்பதாக நினைத்து தூக்கி சென்ற திருடர்களுக்கு காத்திருந்தது மிகப்பெரிய அதிர்ச்சி. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் பகுதியை சேர்ந்தவர் பிரைன் கண்டி. பாம்புகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் இவர் பாம்புகளை இனப்பெருக்கத்தில் ஈடுப்படுத்தி அதன் மூலம் அதன் வகைகளை பெருக செய்து வருகிறது.

பாம்புகள் குறித்த கேள்விகள், பதில்கள், மற்றும் சந்தேகங்களுக்காக கல்லூரிகள், பொது நிறுவனங்களுக்கு கண்டி நேரில் சென்று சிறப்பு உரையாற்றுவார்.அப்படித்தான் சமீபத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக கல்லூரி ஒன்றிற்கு சென்றிருந்தார். அப்போது தன்னுடன் இருந்த 4 மலைப்பாம்புகளை பெரிய சைஸ் பபை ஒன்றில் போட்டுவிட்டு அதனை காரில் விட்டு சென்றார்.

அப்போது அந்த பக்கம் வந்த திருடர்கள் பையில் பணம் இருப்பதாக நினைத்து திருடி சென்றுள்ளனர். திரும்பி வந்து கர்ண்டி காரில் பார்த்த போது காரில் பை இல்லை. அதிர்ச்சி அடைந்த அவர், உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதுமட்டுமில்லை தொலைந்து போன பாம்புகள் குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் காணமால் போன பாம்புகள் பற்றியும் அதனுடன் ஒரு பல்லி இருப்பதாகவும் நிறம், அதன் விஷதன்மை அனைத்தும் பற்றி விவரித்துள்ளார். இந்த சம்பவம் அமெரிக்க சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லை பாம்பை திருடி சென்ற திருடர்கள் முதலில் உயிருடன் இருக்கிறார்களா? என்று கண்டுப்பிடிக்கும்படி நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment