New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/26/tragedy-near-sirumugai-2025-07-26-18-34-24.jpg)
ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு: பரிதாபமாக பலியான சோகம்
புதரில் இருந்து திடீரென வெளியேறிய சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, புற்களை மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைப் பிடித்து விழுங்க முயன்றது. மலைப்பாம்பிடம் இருந்து தப்பிக்க ஆட்டுக்குட்டி கடுமையாகப் போராடியும், பாம்பு அதை முழுமையாகச் சுற்றிக் கொண்டது.
ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு: பரிதாபமாக பலியான சோகம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை மூலத்துறை பகுதி வனப்பகுதியையொட்டி இருப்பதால், அடிக்கடி வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த முன்தினம் மூலத்துறை பவானி ஆற்றுப்படுகையில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, புதரில் இருந்து திடீரென வெளியேறிய சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, புற்களை மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைப் பிடித்து விழுங்க முயன்றது. மலைப்பாம்பிடம் இருந்து தப்பிக்க ஆட்டுக்குட்டி கடுமையாகப் போராடியும், பாம்பு அதை முழுமையாகச் சுற்றிக் கொண்டது.
ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப் பாம்பு: பரிதாபமாக பலியான சோகம்!#Coimbatore pic.twitter.com/G8rzN0Umkj
— Indian Express Tamil (@IeTamil) July 26, 2025
இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து மலைப்பாம்பை விரட்ட முயற்சித்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, மலைப் பாம்பு ஆட்டுக்குட்டியை விடுவித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. ஆனால், இந்த சம்பவத்தில் ஆட்டுக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த நிகழ்வை அங்கிருந்த பொதுமக்கள் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.