குழந்தைக்காக திருட வந்து, கடைசியில் குழந்தையையே விட்டு சென்ற பெண்!

திருட்டு தொழிலில் ஈடுப்பட்ட போது சொந்த குழந்தையையே அழைத்து வந்தது மிகுந்த வேதனை

திருட்டு தொழிலில் ஈடுப்பட்ட போது சொந்த குழந்தையையே அழைத்து வந்தது மிகுந்த வேதனை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
trending viral video today

trending viral video today

trending viral video today : எத்தனையோ வகையான திருட சம்பவங்களை பார்த்து இருப்போம். ஆனால் இப்படி ஒரு சம்பவம் அரிதிலும் அரிது. அதிலும் இந்த பெண் தற்போது அனைவராலும் வசைப்பாடப்படுகிறாள்.

Advertisment

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பாம்பி பேபி எனும் குழந்தைகளுக்கான பிரத்யேக கடை உள்ளது. இங்கு தன் குழந்தையுடன் வந்த பெண், ஸ்ட்ரோலரை திருட முயற்சித்து கடைசியில் தன் குழந்தையையே மறந்து விட்டு சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறத்.

குழந்தைகளுக்கான பொருட்கள் உள்ள கடையில் மூன்று பெண்கள் திட்டம் போட்ட பேசி திருட வந்தனர். இதில் இருவர் ஊழியரிடம் பேசி கவனத்தை திசை திருப்ப மூன்றாவது பெண் ஸ்ட்ரோலரை திருடிச் செல்கிறார். அப்பாடா! ஒருவழியா திருடி விட்டோம் என சந்தோஷத்தில் அவசர அவசரமாக கடையை விட்டு ஓடிய அந்த பெண், கடைசியில் தனது குழந்தையை விட்டு சென்றார்.

பின்பு, குழந்தையை மறந்து விட்டு வந்தது நினைவு வர மீண்டும் வரும்போது கடையின் நிர்வாகத்தினர் அவர்களை கைது செய்தனர். பெண் திருடும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் குறித்து சிபிஎஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் ஸ்ட்ரோலரை திருடிவிட்டு 6 நிமிடங்களுக்குப் பின் பெண்கள் மூவரும் திரும்பி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Advertisment
Advertisements

இந்த வீடியோவை அந்த கடையின் நிர்வாகி ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். மேலும், இதுக்குறித்து உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், திருட்டு தொழிலில் ஈடுப்பட்ட போது சொந்த குழந்தையையே அழைத்து வந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ 2 நாட்களாக சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: