Advertisment

கொளுத்தும் வெயிலில் ஷவர் குளியல்- திருச்சியில் யானைகள் உற்சாகம்

முகாமில் உள்ள யானைகளை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில், வனத்துறை சார்பில் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Trichy

Trichy

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையத்தில் சுமார் 50 ஏக்கர் நில பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் உள்ளது. அனுமதியின்றி தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட யானைகள் மீட்கப்பட்டு இந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

தற்போது  இந்த முகாமில், 11 யானைகள்‌ பராமரிக்கப்பட்டு வருகின்றன.

திருச்சியில் 104, 105 என டிகிரி என வெப்பநிலை உயர்வதால், வெயில் தாக்கம் அதிகமாக இருக்கின்றது.

trichy

இதனால் முகாமில் உள்ள யானைகளை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில், வனத்துறை சார்பில் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

trichy

trichy

அதன்படி, இங்குள்ள யானைகளுக்கு தினமும் பசுந் தீவனத்துடன் குளிர்ச்சியான தர்பூசணி பழங்கள் வழங்கப்படுகின்றன. யானைகள் ஓய்வெடுக்கும் இடங்களில் உள்ள மண் தரையில் தண்ணீர் கலந்து சேறாக்கி, யானைகளை சேற்று குளியல் செய்ய வைத்தும், ஷவர் பாத் எடுக்க வைத்தும் அதிக வெப்ப தாக்கத்தில் இருந்து யானைகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

யானைகள் தண்ணீரைக் கண்டதும் ஒன்றாக ஆனந்த குளியல் போடும் காட்சி காண்போர் மனதைப் பரவசமடையச் செய்கிறது.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment