New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/08/roll-clouds-explanation-2025-07-08-13-10-43.jpg)
கடற்கரையில் ராட்சத சுனாமி அலைகள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
போர்ச்சுகல் கடற்கரையில் சுனாமி அலை போல் திரண்ட மேகங்கள், இயற்கையின் விசித்திரமான மற்றும் அழகான காட்சிப்பதிவாக அமைந்தன. அவை மக்களை ஒருபுறம் திகிலடையச் செய்தாலும், மறுபுறம் இயற்கையின் பிரம்மாண்டமான சக்தியை எண்ணி வியக்க வைத்தன.
கடற்கரையில் ராட்சத சுனாமி அலைகள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
அண்மையில் போர்ச்சுகலின் கடற்கரை நகரங்களில் காணப்பட்ட அசாதாரண வானிலை நிகழ்வு, அங்குள்ள மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. ஜூன் 29 அன்று, கடலில் இருந்து பிரம்மாண்டமான ரோல் மேகங்கள் (Roll Clouds) சுனாமி அலைகள்போல் திரண்டு வந்த காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பெரும் பேசுபொருளானது. இந்த மேகங்கள் சுமார் 150 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக, ஃபிகுவேரா டா ஃபோஸ் (Figueira da Foz) முதல் விலா டோ கோண்டே (Vila do Conde) வரை பரவியிருந்தன.
"சுனாமி மேகங்கள்" என்றால் என்ன?
இந்த மேகங்கள் உண்மையில் "ரோல் மேகங்கள்" (அ) "வோலூட்டஸ் மேகங்கள்" என வானிலை நிபுணர்களால் அழைக்கப்படுகின்றன. இவை கிடைமட்ட அச்சில் சுழலும் குழாய் போன்ற வடிவத்தில் காணப்படும் அரிய வகை மேகங்களாகும். இந்த மேகங்கள் பொதுவாக வெவ்வேறு வெப்பநிலைகளைக் கொண்ட காற்றுப்பகுதிகள் ஒன்றோடொன்று மோதும் போது உருவாகின்றன. அதாவது, சூடான காற்றுப் பகுதி குளிர்ந்த காற்றுப் பகுதியுடன் கலக்கும்போது இந்த தனித்துவமான மேக வடிவம் உருவாகிறது.
போர்ச்சுகலில் நிகழ்ந்த சம்பவம்:
மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதி கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் வரை எட்டியுள்ளது. இந்த அதிகப்படியான வெப்பம் திடீர் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை போன்ற அசாதாரண வானிலை நிகழ்வுகளை உருவாக்கி வருகிறது. இந்த சூழலில்தான், அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து உருவான இந்த ரோல் மேகங்கள், போர்ச்சுகல் கடற்கரையை நோக்கி மிகப்பெரிய அலைபோல் திரண்டு வந்தன.
It was nuts to have experienced this rolling cloud in the north of Portugal. Felt like a tsunami out of a movie! 😂
— Helder (@HelderHP) June 30, 2025
Apparently it was 150km long, stretching from Figueira da Foz all the way up to Vila do Conde, which is close to where I was. pic.twitter.com/BOnr4knsJe
மேகம் அடிவானத்தில் தோன்றியபோது, கடற்கரையில் சிறிது நேரம் இருள் சூழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான காட்சி, பார்ப்பவர்களுக்குத் தாங்கள் சுனாமியைப் பார்க்கிறோமோ என்ற திகிலையும், அதேசமயம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. பலரும் இதை வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து சமூக ஊடகங்களில் பகிர, அவை உடனடியாக லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டன.
இது ஆபத்தானதா?
ரோல் மேகங்கள் பார்வைக்கு பயமுறுத்துவதாக இருந்தாலும், அவை இயல்பாகவே ஆபத்தானவை அல்ல என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இவை வலுவான காற்றுடன் வரக்கூடும் என்றாலும், இவை எந்தவித இயற்கை பேரழிவுக்கும் அல்லது சுனாமி அபாயத்திற்கும் அறிகுறி அல்ல. போர்ச்சுகல் கடல் மற்றும் வளிமண்டல நிறுவனம் (IPMA) இந்த மேகங்கள் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.
போர்ச்சுகல் கடற்கரையில் சுனாமி அலை போல் திரண்ட மேகங்கள், இயற்கையின் விசித்திரமான மற்றும் அழகான ஒரு காட்சிப்பதிவாக அமைந்தன. அவை மக்களை ஒருபுறம் திகிலடையச் செய்தாலும், மறுபுறம் இயற்கையின் பிரம்மாண்டமான சக்தியை எண்ணி வியக்க வைத்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.