twitter trending video today : தெலுங்கானாவில் 24 பேரை ஏற்றிக் கொண்டு வந்த ஷேர் ஆட்டோவை போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வடிவேலு செய்த ஷேர் ஆட்டோ காமெடியை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. பங்கு ஆட்டோ என்று அவர் செய்த காமெடி, எப்போது ஷேர் ஆட்டோவை பார்த்தாலும் நமக்கு சிரிப்பை வரவைக்கும். சென்னையில் ஷேர் ஆட்டோ படு ஜோரான பிஸினஸ்.
காலையில், மாலையில் பீக்கான ஏரியாக்களின் சேர் ஆட்டோ சேவை அதிகமாக இருக்கும். பஸ்களை நம்பி கால்கடக்க நிற்க விரும்பாத பயணிகள் 10 ரூ கொடுத்து ஈஸியாக சென்று விடுவார்கள். பஸ் கூடத்துடன் ஓப்பிடுகையில் ஷேர் ஆட்டோ அவ்வளவு கொடுமையில்லை.
அதே போல், ஷேர் ஆட்டோவில் 12 பேருக்கு மேல் ஏற்றக் கொடாது என்ற விதியும் உள்ளது. அதை மீறி ஏற்றினால் ஓட்டுநர்கள் ஃபைன் கட்ட வேண்டியது இருக்கும். இதுவரை ஷேர் ஆட்டோ என்றாலே சென்னை தான் அதிகமாக பேசப்படும். ஆனால் இம்முறை தெலுங்கானா ஷேர் ஆட்டோ ஓட்டுநர் இணையத்தில் வைரலாகி இருக்கிறார். சுமார் 24 பேரை ஏற்றிக் கொண்டு ஷேர் ஆட்டோவில் அவர் அடித்த டிரப் தான் இன்றைய தினம் இணையத்தின் வைரல் வீடியோ.
அவரை வழிமறித்து விசாரணை செய்த போலீசே கொஞ்ச நேரத்தில் ஷாக் ஆகிவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.