New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/New-Project-2023-06-19T205019.167.jpg)
வால்பாறை பாரளை எஸ்டேட்டில் ஜோடியாக உலா வந்த காட்டு யானைகள்
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த அப்பர்பாரளை பகுதியில் இரண்டு காட்டு யானைகள் தேயிலைத் தோட்டத்திற்குள் உலா வந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வால்பாறை பாரளை எஸ்டேட்டில் ஜோடியாக உலா வந்த காட்டு யானைகள்
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த அப்பர்பாரளை பகுதியில் இரண்டு காட்டு யானைகள் தேயிலைத் தோட்டத்திற்குள் உலா வந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட புதுத்தோட்ட பகுதியில் இரண்டு யானை அப்பகுதியே உலா வந்ததை ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்தனர்.
தற்போது அடர்ந்த வனப்பகுதியில் உணவு என் இல்லாத காரணத்தினால் தேயிலைத் தோட்டத்தில் உணவு தேடி வந்துள்ளது.
வால்பாறையை அடுத்த பாரளை எஸ்டேட் பகுதியில் ஜோடியாக உலா வந்த காட்டு யானைகள் pic.twitter.com/FD8P6HJk2s
— Balaji (@vananeeli) June 19, 2023
உடனடியாக பகுதி மக்கள் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு வனத்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்தி இரண்டு யானைகளையும் அடர்ந்த வனப் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அப்பகுதியில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் மிகவும் எச்சரிக்கையாக வர வேண்டும் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி: பி. ரஹ்மான்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.