New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/19/HxpMk5mjLGQPrUYQrITJ.jpg)
ஏப்.25-ல் நிகழும் அரிய வானியல் நிகழ்வு; ஸ்மைலி போல காட்சியளிக்கும் கோள்கள் - வெறும் கண்ணால் பார்க்கலாம்!
ஏப்ரல் 25-ம் வெள்ளி மற்றும் சனி கோள்கள் அருகருகே சங்கமிக்க உள்ளன. அதன்கீழ் அன்று வர உள்ள தேய்பிறை நிலா, பார்ப்பதற்கு சிரிக்கும் எமோஜி போல காட்சியளிக்க உள்ளது.
ஏப்.25-ல் நிகழும் அரிய வானியல் நிகழ்வு; ஸ்மைலி போல காட்சியளிக்கும் கோள்கள் - வெறும் கண்ணால் பார்க்கலாம்!
ஏப்ரல் 25 அதிகாலையில் நீங்கள் வானத்தைப் பார்த்தால், அது உங்களைப் பார்த்து புன்னகைப்பதைக் காணலாம். ஆம்...ஏப்ரல் 25-ம் வெள்ளி மற்றும் சனி கோள்கள் அருகருகே சங்கமிக்க உள்ளன. அதன்கீழ் அன்று வர உள்ள தேய்பிறை நிலா, பார்ப்பதற்கு சிரிக்கும் எமோஜி போல காட்சியளிக்க உள்ளது. வெள்ளி மற்றும் சனி கோள்கள் பளிச்சென காட்சியளிக்கும் என்பதால் சாதாரண கண்களாலேயே பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்டுள்ளனர்.
ஏப்.25 அன்று டிரிபிள் கான்ஜங்ஷன் எனப்படும் அரிய வானியல் காட்சி நிகழும். காலையில், வெள்ளி, சனி மற்றும் பிறை சந்திரன் ஆகியவை விடியலுக்கு முன்பு நெருக்கமாகத் தோன்றும். இது புன்னகை முகத்தை நினைவூட்டும் ஸ்மைலி வடிவம் போல இருக்கும். சூரிய உதயத்திற்கு சற்று முன்பு இந்த காட்சியை நீங்கள் காணலாம் என்று நாசா தெரிவித்து உள்ளது.
அடிவானத்தின் தெளிவான பார்வை உள்ளவர்களுக்கு மின்னும் ஸ்மைலி வடிவமைப்பு தெரியும். பெரிய கிரகங்களைப் போலல்லாமல், இது வானத்தில் மிகக் குறைவாகத் தோன்றும். எனவே எல்லா இடங்களிலும் தெரியாது என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.
டிரிபிள் கான்ஜங்ஷன் என்றால் என்ன?
வானியலில், இரவு வானத்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாகத் தோன்றும்போது ஒரு இணைப்பு ஏற்படுகிறது. 3 கோள்கள் நெருங்கும்போது அது சங்கமமாகிறது. வெள்ளி மற்றும் சனி கோள்கள் அருகருகே சங்கமிக்க உள்ளன. மெல்லிய பிறை நிலா சிரிப்பது போல புன்னகை முகமாகத் தோன்றும். இந்த அரிய வானியல் நிகழ்வை கண்டுரசிக்கலாம். அதிகாலை 5:30 மணியளவில் சூரியன் ஒரு மணி நேரம் கழித்து காணலாம் என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.