New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/02/rhinoceraus.jpg)
Viral Video: வீடுகளுக்குள் புலி, சிறுத்தை, கரடி நுழைந்ததை எல்லாம் பார்த்திருப்பீர்கள், அதெல்லாம் வழக்கமான பழைய செய்திகள். அதே போல, வளர்ப்பு யானைகளுக்கு என்று தனியாக ஒரு அறை இருப்பதைப் பார்த்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே 2 காண்டாமிருகங்கள் அறைக்குள் இருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள், அல்லது காடுகளுக்கு அருகே அமைந்திருக்கும் கிராமங்களில் வீடுகளுக்குள் சிறுத்தை, புலி புகுந்த செய்திகள் மாதத்துக்கு ஒரு செய்தியாவது வெளியாவது வழக்கமானது. மிகவும் அரிதாக வீடுகளுக்குள் யானைகள் புகுந்த செய்திகள் வெளியாகி இருக்கிறது.
அதே போல, வளர்ப்பு யானைகளுக்கு தனையாக ஒரு கொட்டகை போன்ற அறை அமைக்கப்பட்டு இருப்பதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், சித்வான் தேசியப் பூங்கா சிறித்து வித்தியாசமாக 2 காண்டாமிருகங்களை அறையில் வைத்துள்ளது. ஒரு பெரிய அறையில் இருந்து 2 காண்டாமிருங்கள் வெளியே செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அந்த வீடியோவில், 2 காண்டாமிருங்கள் அறைக்குள் இருந்து வெளியே செல்கின்றன இந்த வீடியோவைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த நெட்டிசன்கள் வேகமாக பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா, “யானைகள் அறைக்குள் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்… சித்வான் தேசிய பூங்காவில் உள்ள அறையில் 2 பெரிய காண்டாமிருகங்கள் இருப்பதைப் பாருங்கள்” என்று பகிர்ந்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.