/indian-express-tamil/media/media_files/2025/10/18/up-man-in-us-2025-10-18-08-09-40.jpg)
உத்தரப் பிரதேசத்தின் மதுராவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் அமித் காஷ்யப், தனது அமெரிக்கக் கனவை நிறைவேற்றியுள்ளார். Photograph: (Image source: @amitkashyap._/Instagram)
உத்தரப் பிரதேசத்தின் மதுராவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் அமித் காஷ்யப், தனது அமெரிக்கக் கனவை நிறைவேற்றியுள்ளார். தற்போது டெக்சாஸின் டல்லாஸில் வசிக்கும் காஷ்யப், தனது பெற்றோருக்கு அமெரிக்காவில் வீடு வாங்கியது மட்டுமின்றி, மறக்க முடியாத ஒரு அமெரிக்கச் சுற்றுலாவுக்கும் அவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.
அமித் காஷ்யப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு உணர்வுப்பூர்வமான வீடியோவில், ஒரு சிறப்பான தருணம் பதிவாகியுள்ளது: அவரது பெற்றோர், நியூயார்க் நகரில் உள்ள ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டரின் 104-வது மாடியில் நின்று, மேற்கு அரைக்கோளத்தின் மிக உயரமான கட்டிடங்கள் கொண்ட பிரமிக்கக் கூடிய நியூயார்க் நகரக் காட்சியைப் பார்த்து ரசிக்கின்றனர்.
காஷ்யப்பின் கருத்துப்படி, நியூயார்க்கில் இருந்தபோது அவரது பெற்றோர் குழந்தை போல உற்சாகத்தில் திளைத்திருந்தனர். மேலும், அவர் தனது பெற்றோருக்கு அமெரிக்காவில் ஒரு விசாலமான புதிய வீட்டையும் பரிசளித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. தனது பெற்றோரை அருகில் அமர வைத்துக் கொண்டு, பி.எம்.டபிள்யூ எக்ஸ் 7 (BMW X7) காரில் அமெரிக்கச் சாலைகளில் ஓட்டிச் செல்வது தனக்கு ஆழமான மன நிறைவை அளிப்பதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார்.
வீடியோவைப் பாருங்கள்:
இந்த வீடியோ உடனடியாகப் பல சமூக ஊடகப் பயனர்களிடம் வரவேற்பைப் பெற்று, காஷ்யப்பின் சாதனையைப் பாராட்டி கருத்துகளை அள்ளி வீசினர். ஒரு பயனர், “வாழ்க்கையில் வெற்றி என்பது இப்படித்தான் இருக்கும்” என்று எழுதினார். மற்றொருவர், “என் பெற்றோருக்காகவும் நான் இது போன்ற ஒன்றைச் செய்ய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்” என்று பதிவிட்டார்.
மூன்றாவது பயனர், “நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றால், இதற்கு மேல் வேறு எதுவும் இல்லை” என்று மகிழ்ச்சியுடன் பதிலளித்தார்.
தனது வெற்றிப் பாதையைப் பற்றிப் பேசிய காஷ்யப், பல ஆண்டுகளாகத் தனது பெற்றோர் செய்த தியாகங்களை உணர்வுப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். “நான் சிறந்த கல்வி பெற வேண்டும் என்பதற்காக என் பெற்றோர் எண்ணற்ற தியாகங்களைச் செய்தார்கள். அவர்கள் என்னை மதுராவில் உள்ள சிறந்த பள்ளிகளில் படிக்க வைத்தனர். சொந்தச் செலவுகளைக் குறைத்து, கடன் வாங்கியும் என் பொறியியல் கட்டணத்துக்காக ஒவ்வொரு பைசாவையும் சேமித்தார்கள். புகை நிறைந்த கண்களுடன் என் அம்மா மண் அடுப்பில் சமைத்ததை நான் இப்போதும் நினைவு கூர்கிறேன். அப்போதே நான் எனக்குள் உறுதியளித்துக் கொண்டேன்: ஒரு நாள், நான் மிகவும் வெற்றி பெற்று எங்கள் குடும்பத்தின் நடுத்தர வர்க்க அடையாளத்தை மாற்றுவேன்” என காஷ்யப் கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.