/indian-express-tamil/media/media_files/0unqbpVQ7X22BG3IjfF3.jpg)
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இல்லத் திருமண விழா அழைப்பிதழ் என்று வைணவ முறையில், குலம், கோத்திரம் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள அழைப்பிதழ் இணையத்தில் பகிரப்பட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இல்லத் திருமண விழா அழைப்பிதழ் என்று வைணவ முறையில், குலம், கோத்திரம் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள அழைப்பிதழ் இணையத்தில் பகிரப்பட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்த அழைப்பிதழ் உண்மையா, போலியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இல்லத் திருமண விழா அழைப்பிதழ் என்று வைணவ முறையில், குலம், கோத்திரம் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள அழைப்பிதழ் இணையத்தில் பகிரப்பட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ இல்லத் திருமண விழா அழைப்பிதழ் என்று வைணவ முறையில், குலம், கோத்திரம் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள அழைப்பிதழ் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்த அழைப்பிதழ் உண்மையானதா, போலியானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோவின் மகனும் திருச்சி தொகுதி எம்.பி.-யுமான துரை வைகோ-வின் மகள் வானதி ரேணுவின் திருமண அழைப்பிதழ் என்ற பெயரில் திருமண விழா அழைப்பிதழ் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
திராவிட இயக்கத் தலைவராக அறியப்படும் வைகோ, அரசியலில் பெரியார், அண்ணா கொள்கை வழியில் நடப்பவராக அறிவித்துக்கொண்டவர். வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார். அவருடைய மகன், துரை வைகோ ம.தி.மு.க-வின் தலைமைக் கழகச் செயலாளராகவும் திருச்சி தொகுதி எம்.பி-யாகவும் உள்ளார். துரை வைகோவும் அரசியலில் தனது தந்தை வழியில் வெளிப்படுத்தி வருகிறார். திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி, மதச்சார்பின்மை என்று பேசி வருகிறார்.
இந்நிலையில், பொதுச் செயலாளர் வைகோ இல்லத் திருமண விழா அழைப்பிதழ் என்று வைணவ முறையில், குலம், கோத்திரம் எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள அழைப்பிதழ் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர்.
துரை வைகோ மகள், அதாவது வைகோவின் பேத்தியின் திருமண அழைப்பிதழ் என ஒன்று இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இந்த அழைப்பிதழ் வைணவ முறைப்படி அச்சிடப்பட்டுள்ளது. அதோடு, ஸ்ரீரங்கநாதப் பெருமாள் திருவருளை முன்னிட்டு என்று தொடங்கும் அழைப்பிதழில், இருவீட்டாரின் குலம், கோத்திரம், நட்சத்திரம், நாள், நல்லநேரம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு திருமண அழைப்பிதழ் அழைந்துள்ளது.
இதனால், திராவிட இயக்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவராக அறியப்படும் வைகோ, தனது பேத்தி திருமண அழைப்பிதழை இப்படி அச்சடித்திருப்பது ஏன் என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி, வைகோ மற்றும் துரை வைகோவை விமர்சித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், இந்த அழைப்பிதழ் உண்மையில் வைகோ இல்லத் திருமண விழாவுக்கான அழைப்பிதழா? அல்லது போலியானதா? என்ற கேள்வியும் இணையத்தில் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.