வீடியோ: இரவில் மாமரத்தை உலுக்கிய "பாகுபலி" யானை; குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம்!

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை சமயபுரம் அடுத்த வெல்ஸ்புரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. உணவுக்காக அங்கிருந்த மாமரத்தை தும்பிக்கையால் உலுக்கியது.

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை சமயபுரம் அடுத்த வெல்ஸ்புரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. உணவுக்காக அங்கிருந்த மாமரத்தை தும்பிக்கையால் உலுக்கியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mettu elephant

வீடியோ: இரவில் மாமரத்தை உலுக்கிய "பாகுபலி" யானை; குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம்!

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம், ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினம்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பாகுபலி என பெயரிட்டு அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானையின் நடமாட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது. யானை பகல் வேளையில் வனப்பகுதிக்குள்ளும், இரவு வேளைகளில் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஊருக்குள் புகுந்து விளைநிலங்களில் பயிர்களைத் தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்டங்களில் தங்குவதை தவிர்த்து வருகின்றனர். மேலும், தொடர்ந்து பயிர்கள் சேதம் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். 

Advertisment

இந்நிலையில், நேற்றிரவு மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை சமயபுரம் அடுத்துள்ள வெல்ஸ்புரம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. ஊருக்குள் வந்த பாகுபலி யானை உணவுக்காக அங்கிருந்த மாமரத்தை தும்பிக்கையால் உலுக்கியது. உணவுக்காக மாமரத்தை உலுக்கிய பாகுபலி யானையின் நெஞ்சை உருக்கும் வீடியோவை அப்பகுதி பொதுமக்கள் தங்களது செல்போனில் பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ வன ஆர்வலர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வருகின்றன.

Advertisment
Advertisements

இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் யானையை மீண்டும் மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: