Advertisment

கால்வாயில் தவறி விழுந்த குட்டி யானை... போராடி மீட்டு தாயிடம் சேர்த்த வனத்துறை - வீடியோ!

கோவை பொள்ளாச்சி அருகே காண்டூர் கால்வாயில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர் தாய் யானையுடன் சேர்த்து வைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
video Coimbatore forest dept rescue baby elephant from canal reunited with mother Tamil News

கால்வாயில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்டு தாயிடம் சேர்த்த வனத்துறையினருக்கு பாராட்டு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

coimbotore | Elephant: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பிஏபி காண்டூர் கால்வாயில் நேற்று காட்டு யானை குட்டியுடன் தவறி விழுந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குட்டியும் தாயும் கால்வாயில் இருப்பதையும் பார்த்தனர்.

Advertisment

இதன் பின்னர் யானைக்குட்டி வெளியே வரமுடியாமல் தாய்யானை இருப்பதையும் கவனித்துள்ளனர். பின்னர் தாய் யானையிடமிருந்து குட்டியானை சற்று தொலைவில் இருக்கும் தருணத்திற்காக காத்திருந்தனர். 

இதன்பிறகு, உடனடியாக கால்வாயில் இறங்கிய  வனத்துறை ஊழியர்கள் குட்டியானை  மீட்டனர். பின்னர் சமதள பரப்பில் வைத்து தாய் யானையிடம் குட்டியை ஒன்று சேர்த்து வைத்தனர். இந்த வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வனத்துறையினர் துரிதமான பணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Elephant coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment