New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/11/human-traffickers.png)
சீனாவில் கடத்தப்பட்ட 6 வயது மகனை, 9 மாதங்கள் கழிந்து கடைத் தெருவொன்றில் கடத்தல்காரர்களிடமிருந்து ஒருவர் மீட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
பெற்ற குழந்தைகளை இழத்தலைவிட பெரும் வலியை தரக்கூடியது வேறொன்றும் கிடையாது. சீனாவில் கடத்தப்பட்ட 6 வயது மகனை, 9 மாதங்கள் கழிந்து கடைத் தெருவொன்றில் கடத்தல்காரர்களிடமிருந்து ஒருவர் மீட்கும் உணர்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவின் ஜிங்சின் மாகாணத்தை சேர்ந்தவர் சென் ஜோங்காங்க். இவருடைய 6 வயது மகன் செங் ஜியாஃபு 9 மாதங்களுக்கு முன் கடத்தப்படுகிறான். போலீஸார் எவ்வளவோ முயன்றும் அச்சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், 9 மாதங்கள் கழித்து சிறுவனின் தந்தை கடைவீதி ஒன்றில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது, தன் மகனை இரு சக்கர வாகனத்தில் யாரோ சிலர் வைத்திருப்பதை பார்க்கிறார். உடனே அவர்களிடமிருந்து தன் குழந்தையை மீட்டு, கடத்தல்காரர்களை போலீஸாரிடம் ஒப்படைக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.