சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரேக் பிடிக்காமல் போன அரசுப் பேருந்து பேரிகாட்டை சில அடிகள் தூரம் வரை இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக அரசின் பஸ் டிப்போ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு நேற்று மாலை 5 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. காரைக்குடி வருமானவரித்துறை அலுவலகம் அருகே வரும் போது, அரசு பேருந்தில் பிரேக் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .
பிரேக் பிடிக்காததால் பேருந்து ஓட்டுனர் பேருந்து நிறுத்துவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் பேருந்து நிற்கவில்லை. பேருந்து நிற்காத காரணத்தினால் அங்கிருந்த பேரிக்காடு மீது மோதி நிறுத்த முயன்றுள்ளார். ஆனாலும் பேருந்து நிற்கவில்லை. இதனால், அங்கிருந்து 500 மீட்டர் தூரம் வரை, கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றுள்ளது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில், காரைக்குடியில் பிரேக் பிடிக்காமல் போன அரசுப் பேருந்து பேரிகாட்டை சில அடிகள் தூரம் வரை இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.