New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/11/tiger-in-a-zoo_759.jpg)
ஆனால், சர்க்கஸ் எல்லா நேரங்களிலும் சந்தோஷத்தை மட்டுமே கொடுக்காது என்பதற்கு சீனாவில் நடைபெற்ற சம்பவம் ஒன்று சான்றாகியுள்ளது.
சர்க்கஸ் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாகிவிடுவார்கள். விலங்குகள் சாகசம் செய்வதை பார்ப்பதென்றால் பலருக்கும் கொள்ளை பிரியம். ஆனால், சர்க்கஸ் எல்லா நேரங்களிலும் சந்தோஷத்தை மட்டுமே கொடுக்காது என்பதற்கு சீனாவில் நடைபெற்ற சம்பவம் ஒன்று சான்றாகியுள்ளது.
தெற்கு சீனாவில் அமைந்துள்ள சாங்ஷி மாகாணத்தில் சர்க்கஸ் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு திரளான மக்கள் கூடி சாகசங்களை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென புலி ஒன்று கூண்டை விட்டு வெளியேறிவிட்டது. அவ்வளவுதான் மக்கள் பயந்து, அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். புலி தாக்கியதில் சிலருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன. அதில், இரண்டு குழந்தைகளுக்கும் புலி தாக்கியதில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.