Advertisment

லியோ ரிலீஸ்; தியேட்டர்களுக்கு வெளியே கொண்டாடத் தடை: விஜய் ரசிகர்கள் ஷாக்

விஜய்யின் ‘லியோ’ படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு வெளியே, ரசிகர்களை சாலைகளில் கொண்டாட அனுமதிக்க வேண்டாம் என்று திரையரங்குகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Leo release

லியோ ரிலீஸ்; தியேட்டர்களுக்கு வெளியே கொண்டாடத் தடை: விஜய் ரசிகர்கள் ஷாக்

விஜய் நடித்திருக்கும் ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்களின் கொண்டாட்டங்களை அனுமதிக்க வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

Advertisment

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19 காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் ரசிகர்கள் ‘லியோ’ படத்தை திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி (FDFS) காண ஆவலுடன் உள்ளார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் படத்தின் ரிலீஸின் போது,  விஜய் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வெளியே பட்டாசு வெடித்து, மேளம், தாளம், ஆட்டம் பாட்டம்  கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால், சில இடங்களில் பொது மக்களுக்கு இடையூறுகளும் ஏற்பட்டுள்ளன.

விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு விளையாட்டு அரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் வரலாம் என்பதால் பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதில் அரசியல் அழுத்தம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. -

இதையடுத்து,  அண்மையில் லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகி விமர்சனங்களையும் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது. லியோ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்ட சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் ரசிகர்கள் கூட்டத்தால் திரையரங்கில் இருந்த இருக்கைகள் உடைக்கப்பட்டன. இந்த நிகழ்வு குறித்தும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், விஜய்யின்  ‘லியோ’ படம் அக்டோபர் 19-ம் தேதி காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால், விஜய் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க திரையரங்குகள் முன்பு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வந்த நிலையில், திரையரங்குகளுக்கு வெளியே கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட தியேட்டர்களுக்கு அனுமதி அளித்ததையடுத்து, தமிழக அரசு திரையரங்கு உரிமையாளர்களுக்கு  திரையரங்குகளுக்கு வெளியே கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து அறிவுறுத்தியுள்ளது.

'லியோ' படத்தின் ரிலீஸின்போது ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக படத்தின் ரிலிஸ் நாளில் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாக இருக்கும். எனவே, ‘லியோ’ வெளியாகும் திரையரங்குகளுக்கு வெளியே, ரசிகர்களை சாலைகளில் கொண்டாட அனுமதிக்க வேண்டாம் என்று திரையரங்குகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

குறிப்பாக சென்னையின் பிரதான சாலைகளில் உள்ள திரையரங்குகளுக்கு இந்தக் கட்டுப்பாடு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதனால், லியோ ரிலீஸ் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வந்த விஜய் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். 

அதே நேரத்தில், தமிழக அரசின் சமீபத்திய உத்தரவு, 'லியோ'வுக்கான எஃப்.டி.எஃப்.எஸ்., அக்டோபர் 19-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும் என்று தெளிவுபடுத்துகிறது. இதற்கிடையில், முதல் 6 நாட்களில் 'லியோ' திரைப்படத்தை தினசரி ஐந்து காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதித்திருப்பது திரையரங்கு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சார்ஜா, கவுதம் மேனன், பிரியா ஆனந்த் மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். கேங்ஸ்டர் ஆக்‌ஷன் படமான 'லியோ' படத்துக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். லியொ படத்தின் மூன்றாவது சிங்கிள் 'அன்பெனும்' பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment