நிவாரணப் பொருள் வேண்டாம்... செல்ஃபி கேட்ட ரசிகை; ‘சரி சரி போ’ என்ற விஜய்: வைரல் வீடியோ

நடிகர் விஜய் நெல்லையில் நிவாரணப் பொருட்களை வழங்கும்போது, வந்த ஒரு பெண் ரசிகை, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பிறகு, நிவாரணப் பொருட்களை வேண்டாம் எனக் கூற,‘சரி சரி போ’ என்று விஜய் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நெல்லையில் நிவாரணப் பொருட்களை வழங்கும்போது, வந்த ஒரு பெண் ரசிகை, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பிறகு, நிவாரணப் பொருட்களை வேண்டாம் எனக் கூற,‘சரி சரி போ’ என்று விஜய் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
vijay video

நிவாரணப் பொருட்களை வழங்கிய நடிகர் விஜய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கியபோது, ஒரு ரசிகை விஜய் உடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு நிவராணப் பொருள் வேண்டாம் என்று கூறிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

அண்மையில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டன. இதில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளையும் நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டது. அமைச்சர்கள் மனோ தங்கராஜ், உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, தி.மு.க எம்.பி கனிமொழி களத்திற்கு சென்று மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை அறிவித்தார்.

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நெல்லையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (30.12.2023) நடைபெற்றது. நெல்லை டி.கே.சி நகரில் நடைபெற்ற இந்த நிகச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உட்பட நிவாரண பொருட்களை வழங்கினார். நடிகர் விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கிய, புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

நடிகர் விஜய் நெல்லையில் நிவாரணப் பொருட்களை வழங்கும்போது, வந்த ஒரு பெண் ரசிகை, விஜய் உடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பிறகு, நிவாரணப் பொருட்களை வேண்டாம் எனக் கூற,‘சரி சரி போ’ என்று விஜய் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நடிகர் விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கும்போது, ஒரு பெண் ரசிகை வருகிறார். அவர் உங்களுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கூற,  நிவாரணப் பொருட்களைக் கீழே வைத்துவிட்டு, விஜய் செல்ஃபிக்கு போஸ் கொடுக்க அந்த பெண் தனது மொபைல் போனில் விஜய் உடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார். பின்னர், அந்த பெண் அங்கிருந்து கிளம்ப, நடிகர் விஜய், அந்த பெண்ணிடம் நிவாரணப் பொருட்கள் வேண்டாமா என்று கேட்க, அதற்கு அந்த பெண் வேண்டாம் என்று கூற ‘சரி சரி போ’ என்று கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: